close
Choose your channels

முதல்வர் பெயரில் 'எடப்பாடியார் நகர்': அதிமுகவினர் கொண்டாட்டம் 

Wednesday, July 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் ’எடப்பாடியார் நகர்’என்று ஒரு பகுதிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது

தமிழகத்தில் சென்னை, மதுரை உள்பட பல முக்கிய நகரங்களில் அண்ணாநகர், கேகே நகர், எம்ஜிஆர் நகர், ஜெஜெ நகர் என முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரில் நகரங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் ஒரு நகரம் உருவாகி உள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு உட்பட்ட தோப்புபாளையம் என்ற பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அடங்கிய புதிய குடியிருப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த நகரத்திற்குதான் ’எடப்பாடியார் நகர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் இந்த பெயரை வைத்து உள்ளார் என்பதும் இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள அதிமுகவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.