'விவேகம்', 'மெர்சல்' படக்குழுவினர்களின் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை

  • IndiaGlitz, [Saturday,August 26 2017]

சினிமா என்பது கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்படும் ஒரு தொழில் மட்டுமின்றி அதில் ஆயிரக்கணக்கான மனித உழைப்பும் இருக்கின்றது என்பதை கூட அறியாமல் ஒருசில பெய்டு விமர்சகர்கள் ஒருசில ஆயிரங்களுக்காக முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் நெகட்டிவ் விமர்சனம் செய்து படத்தின் போக்கை மாற்றிவிடுகின்றனர்.

இந்த நிலையில் சினிமா தயாரிப்பாளர்களுக்கு இடையே மனிதாபிமானமும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் 'விவேகம்' மற்றும் 'மெர்சல்' படக்குழுவினர் நடந்துள்ளனர்.

அதாவது 'மெர்சல்' படத்தின் சிங்கிள் ரிலீஸ் காரணமாக 'விவேகம்' படத்தின் டிரைலரை ஒத்தி வைத்த சம்பவமும், மெர்சல் படத்தின் டிரைலர், 'விவேகம்; படத்தின் ரிலீஸ் காரணமாக ஒத்தி வைத்த சம்பவம் குறித்தும் தற்போது தெரியவந்துள்ளது. அஜித், விஜய் ஆகிய இருவருமே தொழில் அளவில் போட்டியாளர் என்றாலும் ஒருவர் படத்தின் புரமோஷனின் போது இன்னொருவர் விட்டுக்கொடுத்துள்ள இந்த முதிர்ச்சியான நடவடிக்கை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த தகவலை இந்த இரு படங்களின் எடிட்டர் ரூபன் உறுதி செய்துள்ளார்.

சினிமாவை அழிக்க எத்தனை பெய்டு விமர்சகர்கள் தோன்றினாலும் சினிமாக்காரர்களுக்குள் சரியான புரிதல் இருந்தால் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாக கருதப்படுகிறது.

More News

விஜய் இப்போது உண்மையாகவே மேஜிக்மேனா?

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தில் அவர் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த மூன்று வேடங்களில் ஒன்று அவர் இதுவரை நடித்திராத மேஜிக்மேன் வேடம்...

'விவேகம்' விமர்சகரை வெளுத்து வாங்கிய விஜய்மில்டன்

சினிமா என்பது ஒரு தொழில். அந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன.

ஓவியா உள்பட 4 பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் நடித்த படம்

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஓவியா ஒரு சாதாரண நடிகை. ஆனால் இன்று அவர் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் கனவுக்கன்னி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகப்புகழ் பெற்ற ஓவியாவை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முன்னணி நடிகர்களே முயற்சிப்பதாக கேள்வி...

லைகாவின் அடுத்த படத்தில் நயன்தாரா - அனிருத்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'அறம்', 'இமைக்கா நொடிகள்', 'வேலைக்காரன்', 'கொலையுதிர்க்காலம்' ஆகிய படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது சூப்ப ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவின் அடுத்த படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்...

ஜேஎஸ்கே நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'தரமணி', தேசிய விருது பெற்ற 'குற்றம் கடிதல்' உள்பட பல திரைப்படங்களை தயாரித்துள்ள ஜேஎஸ்கே நிறுவனம் தனது அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் இதர விவரங்களை அறிவித்துள்ளது...