close
Choose your channels

நிலைமை கைமீறிச் செல்வதற்குள் உடனடியாக நிறுத்துங்கள்: எடிட்டர் சுரேஷ் டுவிட்

Tuesday, June 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’தமிழ்ப்படம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எடிட்டராக அறிமுகமான எடிட்டர் சுரேஷ் அதன்பின்னர் ’தூங்காநகரம்’ ’வணக்கம் சென்னை’ ’மாயா' உள்பட பல படங்களுக்கு எடிட்டிங் செய்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் நிலைமை நிலைமை கைமீறி செல்வதற்குள் உடனடியாக நிறுத்துங்கள்’ என்று டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மே 31ம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து புகையிலை குறித்த விழிப்புணர்வை கமல், யுவன் சங்கர் ராஜா உள்பட பலர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் பதிவு செய்தனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தான் நாள் ஒன்றுக்கு 50 சிகரெட்டுக்கு மேல் புகைத்துக் கொண்டு இருந்ததாகவும் ஆனால் தற்போது நிறுத்தி விட்டதாகவும் புகையிலையால் உங்கள் குடும்பத்தின் நிலைமை கை மீறி செல்வதற்குள் உடனடியாக நிறுத்துங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் மேலும் கூறியிருப்பதாவது:

ஒரு நாளைக்கு 50க்கும் அதிகமான சிகரெட்டுகளைப் பிடிப்பதிலிருந்து, தற்போது ஒரு சிகரெட்டைக் கூட பிடிக்காமல் இருப்பதுதான் எனக்கு மிகவும் கடினமாக இருந்த விஷயம். ஆனால், மிகவும் பலனளித்த விஷயமும் கூட. எனவே புகைப்பதை நிறுத்துங்கள். உங்கள் குடும்பத்தினர் உங்களை நேசிக்கின்றனர். அவர்களின் வலிமையாக, நம்பிக்கையாக இருங்கள். நிலைமை கைமீறிச் செல்வதற்குள் உடனடியாக நிறுத்துங்கள். என்னால் முடியுமென்றால் கண்டிப்பாக உங்களாலும் முடியும்”.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.