close
Choose your channels

பெற்றோர்கள் தைரியமாக புகாரிக்கலாம்....! தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்...!

Monday, June 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனியார் பள்ளிகள் வாங்கும் வசூல் கட்டணம் குறித்து, பெற்றோர்கள் தாராளமாக முன்வந்து புகாரளிக்கலாம் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

அன்பில் மகேஷ் அவர்கள் திருச்சி மாவட்டத்தில், எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியிருப்பதாவது, "தமிழகத்தில் இருக்கும் பல மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறோம். தனியார் பள்ளிகளைவிடுத்து, மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தனியார் பள்ளிகள் 100% கட்டணம் வசூலிப்பது பற்றி யாரும் நேரடியாக புகாரளிப்பதில்லை, பெற்றோர்கள் முன்வந்து தைரியமாக புகார் கொடுத்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்விற்கு பயிற்சி அளிப்பது பற்றி, நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்களின் குழு பரிந்துரை செய்து வருகிறது. இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்"என்று கூறினார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.