5,000 ஆண்டு பழமையான மது ஆலை? அசந்துபோன ஆய்வாளர்கள்!

  • IndiaGlitz, [Monday,February 15 2021]

பழமைக்கும் விசித்திரத்துக்கும் பெயர்போன எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டு பழமையான மது ஆலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மது என்ற திராவகத்தை மனிதன் ஏதோ கடந்த சில நூறு ஆண்டுகளாக அருந்தி வருகிறான் என்று நாமெல்லாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் மனிதன் என்றைக்கு நாகரிகத்தை உணர ஆரம்பித்தானோ அன்றில் இருந்தே மதுவின் தொடக்கமும் ஆரம்பித்து விட்டது என்பதற்கான சான்று தற்போது அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

எகிப்தின் தெற்கு பகுதியில் உள்ள Abydos எனும் இடத்தில் 5 ஆயிரம் ஆண்டு பழமையான மது ஆலை ஒன்று இயங்கி வந்ததை தற்போது அகழாய்வின் மூலம் அமெரிக்க தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இது Narmar எனும் மன்னனின் ஆட்சிக் காலத்தை சேர்ந்தது என்பதும் தெரியவந்துள்ளது. மேல், கீழ் எனப் பிரிந்து கிடந்த எகிப்தை இந்த Narmar மன்னன்தான் ஒன்றிணைத்தார் என்றும் இந்த மன்னனின் ஆட்சிக் காலத்திலேயே மது பரவலாக இருந்தது என்றும் தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இரண்டு வரிசைகளாக இயங்கி வந்த இந்த மது ஆலையில் கிட்டத்தட்ட 40 மண் பானைகளில் வைத்து மதுவை காய்ச்சி இருப்பதாற்கான அடையாளத்தையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த ஆலையில் கிட்டத்தட்ட 22 ஆயிரத்து 400 லிட்டர் பீர் தயாரித்து இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த மது ஆலை ஒரு கல்லரைக்கு அருகிலேயே அமைக்கப்பட்டு இருப்பதால் இறப்புச் சடங்கின்போது மது அதிகமாக புழங்கி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகிறது.

More News

முன்னணி கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங் மீது வழக்குப் பதிவு! பரபரப்பு சம்பவம்!

இந்தியக் கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த யுவராஜ் சிங், தலித் சமூகத்தை அவமரியாதை செய்தார் என்ற குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது

கட்டணம் இல்லாத இலவச செல்போன் குறைதீர்ப்புத் திட்டம்… முதல்வரை பாராட்டும் சாமானிய மக்கள்!

1100  என்ற செல்போன் எண்ணைக் கொண்டு இனி இலவசமாக மக்கள் தங்களின் குறைகளை நேரடியாக தெரிவிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு திட்டத்தை அமல்படுத்தி உள்ளார்.

விவசாயிகளின் போராட்டம் குறித்து சகாயம் ஐஏஎஸ் வெளியிட்ட அதிரடி கருத்து!

டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத் திருத்தத்தை திரும்ப பெறுமாறு தொடர்ந்து

'தர்பார்' பட நடிகைக்கு திருமணம்: ஒரு ஆண்டாக லிவிங் டுகெதரில் வாழ்ந்தவர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகைக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தனது காதலருடன் லிவிங்டுகெதர்

உங்களுக்கு பொழுதுபோக்கு எனக்கு தொழில்: ரசிகர்களுக்கு அறிவுரை கூறி அஜித் அறிக்கை!

'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.