close
Choose your channels

அண்ணன் முறை வாலிபருடன் மகள் உறவு: அவமானத்தில் தூக்கில் தொங்கிய பெற்றோர்

Monday, August 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தங்களுடைய மகள் அண்ணன் முறை உள்ள வாலிபர் ஒருவருடன் உறவு வைத்துக் கொண்டதை கண்டித்து பார்த்தும் அவர் கேட்காததால் அவமானத்தில் அவருடைய பெற்றோர்கள் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி அருகே கோரக்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு மூன்று மகள்கள் இருந்தனர். மூன்று பேருக்குமே திருமணம் ஆகி விட்ட நிலையில் கடைசி மகள் மட்டும் கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அம்மா வீட்டிற்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில் அம்மா வீட்டிற்கு வந்த மூன்றாவது மகள் சொந்தக்காரர் ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அவர் உனக்கு அண்ணன் முறை என்றும் அவருடன் எந்த விதமான உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் பெற்றோர்கள் அறிவுறுத்தினர். ஆனால் பெற்றோர்கள் அறிவுரையையும் மீறி அவர் தொடர்ந்து அந்த கள்ளக்காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. டீச்சர் ட்ரெய்னிங் முடித்திருந்த அந்த உறவுக்கார வாலிபர், தங்கை முறை என்று தெரிந்தும் கள்ளக் காதலை தொடர்ந்ததோடு ஒரு கட்டத்தில் இருவரும் ஊரை விட்டே ஓடிப் போய் விட்டதாகவும் தெரிகிறது.

அண்ணன் முறை உறவு கொண்ட இளைஞருடன் தனது மகள் ஊரை விட்டு ஓடிப்போன சம்பவத்தால் அவமானமடைந்த பெற்றோர் இரவெல்லாம் அழுது கொண்டே இருந்தனர் என்றும், அதன்பிறகு விடியற்காலை இருவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து ஓடிப்போன மூன்றாவது மகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos