close
Choose your channels

நாளை தமிழகத்தில் தேர்தல் நடக்குமா? பரபரப்பு தகவல்

Wednesday, April 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் நாளை 39 மக்களவை தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. ஆனால் வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா பிரச்சனை காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாளை 38 மக்களவை தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறவுள்ளது

இந்த நிலையில் நேற்று தூத்துகுடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் இல்லத்தில் சோதனை நடத்தியதால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் ஆண்டிப்பட்டி பகுதியிலும் பணப்பட்டுவாடா செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தேர்தலும் ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி 'தமிழகத்தில் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை உள்ள தொகுதிகள் எவை? எவை? என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கையை பெற்றவுடன் தமிழகத்தில் எந்தெந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படும் என தெரிய வரும் என்பதால் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.