சரத்குமாருக்கு செல்லாத நோட்டை கொடுத்த தேர்தல் ஆணைய அதிகாரிகள்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது நடிகர் சரத்குமார் அதிமுக ஆதரவு வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் சரத்குமாரின் காரில் இருந்த ரூ.9 லட்சத்தை கைப்பற்றி, அந்த பணத்திற்குரிய கணக்குகளை ஒப்படைத்துவிட்டு பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்தனர்
இந்த நிலையில் சரத்குமார் சில மாதங்கள் கழித்து தேர்தல் ஆணையத்திடம் கணக்குகளை ஒப்படைத்தவுடன் அவரிடம் இருந்து கைப்பற்றிய ரூ.9 லட்சத்தை திருப்பி கொடுத்தனர். ஆனால் அவை அனைத்து செல்லாது என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனக்கு புதிய நோட்டுக்கள் அல்லது டிடி/செக் வழங்குமாறு சரத்குமார் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்தார். ஆனால் தேர்தல் ஆணையம் சரத்குமாரிடம் இருந்து கைப்பற்றிய அதே நோட்டுக்களைத்தான் திருப்பி கொடுக்க முடியும் என்று பதிலளித்தது
இந்த நிலையில் இதுகுறித்து சரத்குமார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 'பண மதிப்பிழப்பு தொடர்பான எந்த வழக்கும் சுப்ரீம் கோர்ட் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவு இருப்பதால் சரத்குமார் சுப்ரீம் கோர்ட்டை அணுகுமாறு ஐகோர்ட் நீதிபதி எம்.துரைசாமி அறிவுறுத்தினார். இதனையடுத்து விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் சரத்குமார் இதுகுறித்து வழக்கு தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.