கொத்துக் கொத்தாகச் செத்து மடியும் யானைகள்: விஞ்ஞானிகள் எதிர்கொள்ளும் புது சிக்கல்!!!

  • IndiaGlitz, [Saturday,July 04 2020]

 

தென் ஆப்பிரிக்கா நாடான போட்ஸ்வானஸ் இல் தற்போது ஒரு புது சிக்கல் வெடித்து இருக்கிறது. அந்நாட்டின் ஓகவாங்கோ மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் யானைகள் கொத்து கொத்தாக செத்து மடிகின்றன என்ற தகவலை பிரிட்டனைச் சார்ந்த ஒரு ஆய்விதழ் வெளியிட்டு இருக்கிறது. அதையடுத்து கடந்த மே மாதல் முதல் 350 க்கும் மேற்பட்ட யானைகள் இறந்து இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலும் கூறப்படுகிறது. இதற்கான காரணம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப் பட வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஒகவாங்கோ டெல்டா பகுதியில் பல்லுயிர் விஞ்ஞானிகள் தற்போது யானைகள் இறப்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 3 நாட்கள் விமானத்தில் மூலம் ஆய்வு மேற்கொண்டதில் 162 யானைகள் இறந்து இருப்பது கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது. உடனே அந்நாட்டு அரசுக்கும் இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப் பட்டது. ஆனால் யானைகள் இறப்பதற்கு முழுமையான காரணம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. சயனைட் போன்ற நச்சுப் பொருட்கள் கொடுக்கப் பட்டு இருந்தால் காட்டில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் இறந்து போயிருக்கும். ஆனால் யானைகள் மட்டுமே இறக்கின்றன. ஒருவேளை வேட்டைக் காரர்களின் செயலாக இருக்குமோ என்ற அச்சமும் எழுந்து இருக்கிறது.

இதையடுத்து தந்தங்களுக்காக யானைகளை சமூக விரோதிகள் சுட்டு வீழ்த்தி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்க பகுதிகளில் ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்த் தொற்று பரவி பெரும்பாலான விலங்கினங்களை தாக்கியது. அதுபோல பெருந்தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்ற அச்சமும் தற்போது எழுந்து இருக்கிறது. வறட்சி போன்ற எந்த இயற்கை பேரிடர்களில் இல்லாத சூழலில் யானைகள் இப்படி இறப்பதும் விஞ்ஞானிகளுக்கே பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுகுறித்த விரிவான ஆராய்ச்சியை அந்நாட்டு விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ரணகளத்திலும் குதூகலம் கேக்குது... 2.89 லட்சம் மதிப்பிலான கொரோனா மாஸ்க்!!! ஆச்சர்யப்பட்ட மக்கள்!!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் கடும் யுத்தத்தையே நடத்த வேண்டியிருக்கிறது

திரைப்படமாகிறது 'கால்வான்' பள்ளத்தாக்கு மோதல்: பிரபல நடிகர் தயாரிக்கின்றார்!

சமீபத்தில் இந்திய சீன எல்லையான 'கால்வான்' பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டதில் 20 இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தனர்.

கமல்ஹாசனின் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்த ஜிவி பிரகாஷ்!

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை

வாழ்த்து கூறிய பாஜக பிரபலத்திற்கு 'தேங்க்யூ அங்கிள்' சொன்ன காயத்ரி ரகுராம்

திமுக, அதிமுக ஆகிய இரண்டு முன்னணி திராவிட கட்சிகளுக்கு இடையே கட்சியை வளர்க்க பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் கடந்த சில மாதங்களாக தீவிர முயற்சி செய்து வருகிறார்.

விஜய்யின் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு போஸ்டர் வைரல் 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி அதனிடம் இருந்து மக்களை பாதுகாக்க