close
Choose your channels

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை: காரணம் என்ன?

Monday, July 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள புராரி என்ற பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் வசித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை வெகுநேரம் ஆகியும் அவர்களது வீடு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது அந்த வீட்டில் 11 பேர் தற்கொலை செய்திருந்தனர். பத்து பேர் தூக்கில் தொங்கியும் ஒரு வயதான பெண் படுக்கையில் மரணம் அடைந்திருந்தனர். தற்கொலை செய்து கொண்டவர்களில் 7 பேர் பெண்கள் என்று கூறப்படுகிறது. மேலும் அவர்களின் கண்கள், கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது

சம்பவம் நடந்த அந்த வீட்டில் போலீசார் விசாரணை செய்தபோது ஒரு டைரி சிக்கியது. அந்த டைரியில் கண், கால்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டு தற்கொலை செய்தால் அவர்கள் சொர்க்கத்திற்கு சென்று மோட்சம் அடைவார்கள் என்ற குறிப்பு இருந்தது.

இதனால் 11 பேர்களும் மோட்சம் வேண்டி தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் 11 பேர்களின் பிரேத பரிசோதனை வந்தபின்னரே இதுகுறித்த அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.