இந்தியர்களின் அமெரிக்க கனவை தகர்த்த அதிபர் டிரம்ப்

  • IndiaGlitz, [Tuesday,January 31 2017]

இந்தியாவில் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொருவரின் கனவு அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆகவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். லட்சக்கணக்கில் சம்பளம், வசதியான வாழ்க்கை ஆகியவையே இதற்கு காரணம். இதனால்தான் தினந்தோறும் அமெரிக்க தூதரகங்கள் முன் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்பதை பார்த்து வருகிறோம்.

ஆனால் தற்போது இந்தியர்களின் அமெரிக்க கனவை ஒரே ஒரு மசோதா மூலம் தகர்த்துவிட்டார் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப். அமெரிக்காவில் இந்தியர்கள் பணிபுரிய வேண்டுமானால் அதற்கு எச்1பி விசா அவசியம். இந்த விசா குறித்த சீர்திருத்த மசோதா இன்று அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய மசோதாவின்படி எச்1பி விசா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 60 ஆயிரம் டாலர்கள் மட்டுமே சம்பளமாக இருந்த நிலையில் தற்போது திடீரென இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் இனிமேல் வெளிநாட்டு ஊழியர்களை குறிப்பாக இந்திய ஊழியர்களை பணியமர்த்த அமெரிக்க நிறுவனங்கள் யோசிக்கும்.

மேலும் எச்1பி விசா எடுக்க கட்டணமும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் 40 கோடி டாலர் கூடுதல் சுமை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட புதிய சீர்திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டதன் காரணமாக இன்று இந்திய பங்குச்சந்தையில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. இந்தியாவில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், எச்.சி.எல், டெக் மகேந்திரா, விப்ரோ, ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் ஆட்டம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

More News

அதிகாரிகள் முன் தாய்ப்பால் சுரந்து சோதனை. ஜெர்மனி விமான நிலையத்தில் இந்திய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் என்ற விமான நிலையத்தில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் அதிகாரிகள் முன் மார்பகத்தில் தாய்ப்பால் சுரந்து காண்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது...

பிரபல தமிழ் நடிகையின் தாத்தா அடுத்த ஜனாதிபதியா?

கர்நாடக மாநில முதலமைச்சர், மகாராஷ்டிரா மாநில கவர்னர், மத்திய அமைச்சர் என பல பதவிகளில் இருந்த பழம்பெரும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் என்பதை பார்த்தோம்...

இளையதளபதி விஜய்யின் 61வது படத்தின் அதிகாரபூர்வ தகவல்

இளையதளபதி விஜய் நடிக்கும் 61வது படம் குறித்து பல்வேறு செய்திகளை அவ்வப்போது வெளியிட்டு வந்தோம்.

ஜல்லிக்கட்டு வன்முறையில் கைதான மாணவர்கள் மீதான வழக்குகள் குறித்து ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பு

சமீபத்தில் சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுக்கான புரட்சி போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த போராட்டத்தின் இறுதி நாளில் வன்முறை வெடித்தது

இணைவதற்கு முன் மோதலுக்கு தயாராகும் அஜித்-ஏ.ஆர்.முருகதாஸ்

அஜித் நடித்த 'தீனா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் அஜித் படத்தை இயக்கவேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் அவ்வப்போது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்...