close
Choose your channels

சென்னை லைகா அலுவலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை..!

Tuesday, May 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனத்தின் சென்னை அலுவலகங்களில் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள லைகா நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சட்டவிரோத பண பரிமாற்ற புகாரின் பேரில் சென்னை லைகா நிறுவனம் மற்றும் நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன் 2’ உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இந்நிறுவனம் அஜித்தின் ’விடாமுயற்சி’ ரஜினியின் ’லால் சலாம்’ மற்றும் கமலஹாசனின் ’இந்தியன் 2’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.