ஆர்யா திருமணம் செய்து கொள்ள போகும் அந்த பெண்

  • IndiaGlitz, [Tuesday,April 17 2018]

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த சில மாதங்களாக ஆர்யா நடத்தி வரும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்களில் ஒருவரை ஆர்யா தனது மனைவியாக தேர்வு செய்யவுள்ளார் என்று இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் விளம்பரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர்களில் மூன்று பெண்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்று நடைபெறும் இறுதி போட்டியில் இவர்களில் ஒருவரை ஆர்யா தேர்வு செய்யவுள்ளார்

இந்த இறுதி நிகழ்ச்சியின் புரமோ வீடியோவில் ஆர்யா ஒரு பெண்ணை தேர்வு செய்து அவரை கட்டிப்பிடிப்பது போன்ற காட்சி உள்ளது இருப்பினும் அவர் தேர்வு செய்தது அந்த பெண்ணைத்தானா? அல்லது வேறு பெண்ணா? என்பது இன்றைய நிகழ்ச்சியின் முடிவில் தான் தெரியவரும்

அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றாலும் அந்த பெண் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளவும், அவரை வேண்டாம் என்று சொல்லவும் உரிமை உண்டு. ஒருவேளை வெற்றி பெறும் பெண் ஆர்யாவை திருமணம் செய்ய மறுக்கும் பட்சத்தில் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இணையத்தை கலக்கும் சச்சினின் நள்ளிரவு வீடியோ

இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் சச்சினின் நள்ளிரவு வீடியோ ஒன்று கடந்த சில மணி நேரங்களாக இணையத்தை கலக்கி வருகிறது.

சண்முகப்பாண்டியன் கையில் அடங்கிய விஜயகாந்த் கண்கள்

திரைத்துறையில் 40 ஆண்டுகாலம் சேவை செய்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் விழா எடுக்கப்பட்டது. இந்த விழாவில் பிரபல இயக்குனர்கள் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்

ஸ்ரீரெட்டிக்கு எதிராக கிளம்பிய உச்ச நட்சத்திரத்தின் ரசிகர்கள்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக நடிகைகளை படுக்கைக்கு அழைத்த பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறார். இதனால் தெலுங்கு திரையுலகமே பரபரப்பில் உள்ளது.

தளபதி விஜய் படத்தின் வெளிவராத பாடல்

விஜய் நடிப்பில் இயக்குனர் பரதன் இயக்கிய 'பைரவா' திரைப்படம் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களின் வரவேற்பினை பெற்றது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

பிம்பத்தை உடைக்கவே குரல் கொடுத்தேன்: சிம்பு

காவிரி பிரச்சனை ஒருபக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் கர்நாடக மாநிலத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமே போராட்டக்களத்தில் உள்ளது.