close
Choose your channels

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி… இந்தியா படுதோல்வி!

Tuesday, February 9, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 5 ஆம் தேதி தொடங்கிய இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து தற்போது 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. கடந்த ஒரு வருடமாக கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் எந்த சர்வதேசப் போட்டிகளும் நடைபெற வில்லை.

இந்நிலையில் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்து உள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்கிஸில் இங்கிலாந்து 578 ரன்களை குவித்து இருந்தது. பின்பு களம் இறங்கிய இந்திய அணி 337 ரன்களில் சுருண்டது.

பின்னர் 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியை இந்திய வீரர்கள் வெறும் 178 ரன்களில் வீழ்த்தினர். இது பெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது. இதனால் இலக்குகளை மிக எளிதாக அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையும் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் 419 ரன்கள் என்ற இலக்குடன் நேற்று களம் இறங்கிய இந்திய அணி வெறும் 12 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை பறிக்கொடுத்தது.

அதைத் தொடர்ந்து 5 ஆம் நாளாக இன்று விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து உள்ளனர். இதனால் 227 ரன்கள் வித்தியாசத்தில் தற்போது இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் கடும் உற்சாகத்தில் வலம் வருகின்றனர். 4 டெஸ்ட் கிரிக்கெட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளுக்காக இந்தியா வந்த இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றிப் பெற்று இருப்பதால் கடும் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.