'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸ் எப்போது? தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

  • IndiaGlitz, [Friday,September 06 2019]

இன்று வெளியாக வேண்டிய தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் நீதிமன்ற உத்தரவு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுள்ளது. இதனையடுத்து இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

செப்டம்பர் 6 அன்று வெளியாகவிருந்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை. பெரும் முயற்சிகள் பல செய்து இத்திரைப்படத்தை வெளியிட முடியும் என்ற உறுதியோடு பணிபுரிந்த எங்களுக்கும் இது பெரிய ஏமாற்றமாக உணர்ந்து வருகிறோம். மிக விரைவில் அடுத்த சில தினங்களில் வெளியிட மேலும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

இது நீண்ட பெரும் பயணம் என்பதை நாங்கள் அறிவோம். மறுக்கவில்லை! இதில் ஏற்படும் தாமதத்தினால் உங்களுக்கு ஏற்படும் ஏமாற்றமும் விரக்தியையும் அதன் காரணமாக நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் நாங்கள் அறிவோம். உங்கள் கருத்துக்களை கணக்கில் கொண்டே எங்களது பயணமும் அமைந்துள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் இலக்கை எட்டும் நிலையில் நாங்கள் வேண்டுவது உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே.

இந்த நிலையில் நீங்கள் பொறுமையுடன் எங்களையும் இந்த திரைப்படத்தையும் ஆதரிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இத்திரைப்படத்தை திரையரங்கில் நீங்கள் பார்க்கும்போது உங்கள் இத்தனை காத்திருப்பையும் இப்படைப்பு நியாயம் செய்யும் என உளமாற நம்புகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

More News

சாக்சி கொடுத்த பச்சோந்தி விருது! தூக்கி எறிந்த லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் போட்டியாளர்களிடையே கடுமையான வாக்குவாதமும், போட்டியும் எழுந்துள்ளது. தனிப்பட்ட முறையிலான தாக்குதல்,

ஆசிரியர் தினத்தில் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ள குசும்பு வீடியோ!

இந்தியா முழுவதும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்தனு

கமல்ஹாசனுக்காக இதை கர்வமாக, கடமையாக செய்கிறேன்: சூர்யா

உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகில் நடிக்க வந்து 60 வருடம் நிறைவு பெற்றதை அடுத்து இந்த ஆண்டு முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மலேசிய அமைச்சருக்கு ஜோதிகா எழுதிய நன்றிக் கடிதம்! 

ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படத்தை பார்த்து மலேசிய அமைச்சர் மாஸ்லே பின் மாலிக் என்பவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாராட்டு தெரிவித்தார் என்பது தெரிந்ததே.

சந்தானம் நடிக்கும் மூன்று வேட படத்தின் டைட்டில் அறிவிப்பு

முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக புரமோஷன் பெற்று வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.