பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை வழங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட தமிழக விவசாயிகளின் ரூ.12,110 கோடி கடனை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த அறிவிப்பினால் 16.43 லட்சம் விவசாயிகள் பலன் அடைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் இன்னும் 10-15 நாட்களில் இதற்கான ரசீது வழங்கப்படும் என கூறி இருந்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது விவசாயிகளிடன் பயிர்க்கடன் தள்ளுபடிக்கான திட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து அதற்கான ரசீதையும் வழங்கினார். தமிழக விவசாயிகளிடம் பெருத்த வரவேற்பை பெற்ற இத்திட்டத்தினால் பலரும் பலன் அடைந்து வருகின்றனர்.

இதைத்தவிர விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை இலவச மின்சாரத் திட்டத்தையும் சமீபத்தில் துவக்கி வைத்துள்ளார். மேலும் தமிழர்களின் பெருமையை பறைச்சாற்றும் கீழடி 7 ஆம் கட்ட தொல்பொருள் அகழாய்வுகளையும் தற்போது காணொலி மூலம் துவக்கி வைத்தார். இத்தகைய நடவடிக்கைகளினால் தமிழக முதல்வருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

More News

கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு… காணொலி வாயிலாகத் துவக்கி வைத்த தமிழக முதல்வர்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் மத்தியத் தொல்லியல் துறை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நடிகர் நகுல் க்யூட் குழந்தையின் புகைப்படம் வைரல்!

இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் 'காதலில் விழுந்தேன்' 'மாசிலாமணி' 'கந்த கோட்டை' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் நகுல்

மனைவி, 3 குழந்தைகளுடன் வைரலாகும் ஹரி ஃபேமிலி புகைப்படம்!

தமிழ் சினிமாவில் அதிக ஹிட் கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் ஹரி என்பது அனைவரும் அறிந்ததே. பிரசாந்த், சிம்ரன் நடித்த 'தமிழ்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹரி

'சித்தி 2' சீரியலில் இருந்து ராதிகா விலகியது இதற்குத்தானா?

நடிகை ராதிகா சமீபத்தில் 'சித்தி 2' சீரியலில் இருந்து வெளியேறினார் என்ற செய்தியை தனது ட்விட்டர் மூலம் தெரிவித்தார் என்பதை பார்த்தோம். 'சித்தி 2' என்ற மெகா சீரியல் இருந்து நான் வெளியேறும்

தமிழகத்தின் நிரந்தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி… ஆலோசனைக் கூட்டத்தில் மாஸ் என்ட்ரி!

தமிழகச் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.