close
Choose your channels

தினகரன் அணியில் மேலும் 10 எம்.எல்.ஏக்கள்: ஆட்சி தப்பிக்குமா?

Tuesday, August 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுகவின் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் நேற்று இணைந்ததால் அதிருப்தி அடைந்த தினகரன் அணியின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு தங்கள் ஆதரவு இல்லை என்று தெரிவித்தனர். இதனால் எந்த நேரமும் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
தற்போது தினகரன் அணிக்கு 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படும் நிலையில் மேலும் பத்து எம்.எல்.ஏக்கள் அவரது அணியில் இணைய தயாராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி உண்மையென்றால் ஆட்சி கவிழும் ஆபத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அவசர ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.