சசிகலா அதிமுகவில் இல்லை… விளக்கம் அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று அக்கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் சசிகலா அதிமுகவில் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

திருமதி சசிகலா, அவரது தொண்டர் ஒருவருடன் நேரடியாகத் தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் கட்சியை சரிப்படுத்தி விடலாம். நான் இருக்கிறேன் என்பது போன்ற சொற்களை திருமதி சசிகலா கூறியிருந்தார். இதையடுத்து சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவாரா? இதனால் அதிமுகவில் மீண்டும் குழப்பம் வருமா? என்பது போன்ற சந்தேகத்தைப் பலரும் எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் இன்று கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கொண்டு 9 மாவட்டச் செயலாளர்களுடன் நேரடியாக ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். அந்தக் கூட்டத்தில் சென்னை மாநகரத்துக்கு உள்ளிட்ட 18 தொகுதிகளில் அதிமுக ஏன் ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை என அவர் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

அதோடு தேர்தல் முடிவிற்கு பின்பு நடைபெறும் இந்த முதல் கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டம் முடிந்தவுடன் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது சசிகலாவின் ஆடியோ சோஷியல் மீடியாவில் வெளியானது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதில் அளித்த அவர், சசிகலா அதிமுக கட்சியில் இல்லை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது, தான் அரசியலில் இருந்து விலகிவிட்டதாக ஊடகம் மற்றும் பத்திரிகைகளுக்கு அவர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். எனவே அந்த ஆடியோக்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க எதுவும் இல்லை, அவர் அமமுக தொண்டர்களுடன்தான் பேசி வருகிறார் என்று பதில் அளித்துள்ளார்.

More News

சாராய ஊறலைக் குடித்த பள்ளி மாணவர்கள்… மருத்துவமனையில் கவலைக்கிடம்!

கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய ஊறலைக் குடித்த 3 மாணவர்கள் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பாதிப்பு குறைவு....! ஆனால் உயிரிழப்பு அதிகம்...பதறும் கொங்கு மண்டலம்......!

கோவையில் கொரோனா அதிகரித்து வந்த நிலையில், தற்போது பாதிப்பு சற்றே குறைந்துள்ளது.

கொரோனா தடுப்பு பணிக்காக சீமான் ரூ.5 லட்சம் நிதியுதவி!

கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் ரூ.5 லட்சம் நிதியை நன்கொடையாக வழங்கி உள்ளார்.

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு: எஸ்பிபிக்காக கமல் பதிவு செய்த டுவிட்!

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனும் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது திரையுலகைச் சார்ந்த அனைவருக்கும் தெரிந்ததே.

தடுப்பூசி ஒரு ஹெல்மெட் மாதிரி: டபுள் ஆக்சனில் கலக்கும் வரலட்சுமியின் வீடியோ!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சமூக கருத்துக்களை பகிர்ந்து வருவார் என்பதும் தெரிந்ததே