close
Choose your channels

இன்று முதல் சென்னைக்குள் பயணிக்கவும் இ-பதிவு கட்டாயம்! தமிழக அரசு அறிவிப்பு

Tuesday, May 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கோ அல்லது மாவட்டங்களுக்குள் செல்வதற்கோ இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே. இதற்கென பிரத்தியேகமாக தமிழக அரசு வெளியிட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்து பின்னர் தான் மாவட்டங்களுக்குள் அல்லது மாவட்டங்களுக்கு வெளியே பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று முதல் சென்னைக்குள் பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று முதல் சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 10 மணிக்கு மேல் வாகனங்களில் செல்ல இ-பதிவு அவசியம் என்றும் இ-பதிவு இல்லாமல் வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் தவிர்க்க முடியாத தேவைகளை தவிர வேறு எந்த நடவடிக்கைகளுக்கும் இ-பதிவு இல்லாமல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.