தேசிய விருது பெற்ற இயக்குனரின் படத்தில் 'காலா' புகழ் ஈஸ்வரிராவ்

  • IndiaGlitz, [Saturday,June 09 2018]

'காலா' படத்தில் ரஜினியின் மனைவி செல்வி கேரக்டரில் நடித்திருந்த நடிகை ஈஸ்வரிராவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அவர் தோன்றும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களால் கைதட்டல் பெற்றது அவரது நடிப்பிற்கு கிடைத்த பரிசாக கருதப்படுகிறது.

குறிப்பாக அவர் அறிமுகமாகும் காட்சியில் ரஜினி உள்பட அவருடைய குடும்பத்தினர்கள் அனைவரிடமும் பேசும் நீளமான காட்சியை ஒரே டேக்கில் அவர் முடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த படம் வெளிவந்தவுடனே ஈஸ்வரிராவ் கோலிவுட் திரையுலகில் ஒரு நீண்ட ரவுண்ட் வருவார் என்று அனைத்து விமர்சகர்களும் கூறினர்

அந்த வகையில் அவருக்கு அடுத்த படம் தற்போது புக் ஆகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'அர்ஜூன் ரெட்டி' ரீமேக் படமான 'வர்மா' படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஈஸ்வரிராவ் ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில்தான் சீயான் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டெல்லியில் பயங்கர புழுதிப்புயல்: வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை

கடந்த சில மாதங்களாக அடிக்கடி புழுதிப்புயல் வீசி வட இந்திய மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் இன்று டெல்லியில் இன்னும் சில நிமிடங்களில் பயங்கர புழுதிப்புயல் வீழும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

முடிவுக்கு வந்தது 'முரட்டு குத்து' புகழ் யாஷிகா ஆனந்தின் அடுத்த படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான வசனம் தான் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வசனத்தையே டைட்டிலாக வைத்து ஒரு திரைப்படத்தை 'எருமைச்சாணி' குழுவினர் தயாரித்து வந்தனர்.

அஜித் படத்தை பாராட்டிய விஜய் பட வில்லன்

அஜித், நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் விவேகம். ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட இந்த படம் சமீபத்தில் 'வீர்' என்ற பெயரில் இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய்சேதுபதியின் 'ஜூங்கா' டிராக் லிஸ்ட் வெளியீடு

விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள 'ஜூங்கா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார்?

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே. தொலைக்காட்சி சீரியலுக்கு அடிமையாகி இருந்தவர்கள்