விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: ஐரோப்பியன் யூனியன் அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Wednesday,July 26 2017]

பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பை 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதனால் ஐரோப்பிய யூனியனில் உள்ள 28 நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் பெயரில் உள்ள வங்கிக்கணக்கை இனி அவர்கள் பயன்படுத்தலாம்
கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயரில் எந்தவொரு பயங்கரவாத செயலும் நடக்காததால், தடை பட்டியலில் இருந்து நீக்கியதாக ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டே கீழமை நீதிமன்றத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்பட்டது. ஆனால் ஐரோப்பிய யூனியன் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. தற்போது மேல்முறையீட்டில் தடை நீக்கம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

More News

நெடுவாசல் போராட்ட மாணவர் குபேரன் ஜாமீனில் விடுதலை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பட்டத்திற்கான மாணவர் குபேரன் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அடுத்த வார தலைவர் போட்டியில் ஜூலி: அதிர்ச்சியில் நேயர்கள்

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் தலைவருக்கான போட்டி நடைபெற்று அதில் வெற்றி பெறுபவர் தலைவராக நியமனம் செய்யப்படுவது வழக்கம். இதுவரை சினேகன், காயத்ரி, கணேஷ், வாசு, மீண்டும் சினேகன் ஆகியோர் தலைவர்களாக இருந்துள்ளனர்...

காயத்ரி மீது திடீர் கரிசனம் ஏன்? சில சந்தேகங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஜூலி எந்த அளவுக்கு வில்லித்தனம் செய்கின்றாரோ அவருக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல காயத்ரி. அவர் பேசிய ஒரு வார்த்தை ஒரு குறிப்பிட்ட பிரிவினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி போராட்டம் நடத்தும் அளவுக்கு சென்றது...

வைகோவை கட்டியணைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த துரைமுருகன்

அரசியலில் கருத்துவேறுபாடு அதிகம் இருந்தாலும் பொது இடத்தில் சந்திக்கும்போது நாகரீகமாக நடந்து கொள்ளும் அரசியல்வாதிகள் பலர் உண்டு. அவ்வாறான சந்திப்பில் நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடப்பதுண்டு. அந்த வகையில் அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்த கவிகோ அப்துல்ரஹ்மான் அவர்களின் இரங்கல் கூட்டத்தில் நடந்தது...

மலையாள நடிகை பாலியல் வழக்கு: காவ்யா மாதவனிடம் போலீசார் விசாரணை

பிரபல மலையாள நடிகை ஒருவரின் பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.