close
Choose your channels

இதற்கு ஏன் வெட்கப்பட வேண்டும்? தாய்ப்பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்டு அலறவிட்ட நடிகை!

Tuesday, January 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மாடலும் பாலிவுட் நடிகையுமான ஈவ்லின் ஷர்மா தனது குழந்தைக்குப் பாலூட்டும் புகைப்படங்களை கடந்த வாரம் வெளியிட்டதைத் தொடர்ந்து ரசிகர்கள் அவர்மீது கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இதற்கு ஏன் வெட்கப்பட வேண்டும் என்று பதிலடி கொடுத்திருக்கும் தகவல் சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி மாடலான ஈவ்லின் ஷர்மா அமெரிக்க திரைப்படங்களில் நடித்து வந்ததைத் தொடர்ந்து பாலிவுட்டில் அறிமுகமானார். இவர் அயன் முகர்ஜி இயக்கத்தில் வெளியான “யே ஜவானி ஹை திவானி“ திரைப்படத்தின் மூலம் இந்திய ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது பஞ்சாபியில் வசித்துவரும் இவர் ஆஸ்திரேலிய இந்தியரான துவான் பிண்டியை திருமணம் செய்துகொண்டு கடந்த ஆண்டு ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

இந்நிலையில் தனது 2 மாதக் குழந்தையான அவா பிண்டிக்கு பாலூட்டும் புகைப்படங்களை நடிகை ஈவ்லின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பார்ப்பதற்கு ஆபாசமாக இருப்பதாக விமர்சித்தனர். இதையடுத்து தாய்மார்கள் தனியாக இல்லை என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று தான் விரும்புவதாக விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் “ஒரேநேரத்தில் இந்தப் படங்கள் பாதிப்பையும் வலியையும் காட்டுகின்றன. நான் அதை அழகாக காண்கிறேன். தாய்ப்பால் மிகவும் இயற்கையான ஆரோக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். உண்மையில் பெண்களுக்கு முதலில் மார்பகங்கள் இருப்பது இதற்குத்தான்“ என பதிலடி கொடுத்துள்ளார். நடிகை ஈவ்லின் ஷர்மா கூறியிருக்கும் இந்தக் கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.