பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனருக்கு ஆசிரியர் தின வாழ்த்து அனுப்பிய நடிகை

  • IndiaGlitz, [Tuesday,March 07 2017]

பிரபல நடிகை பாவனா தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து தைரியமாக காவல்நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் பாவனாவின் தைரியத்திற்கு பாராட்டு மழை குவிந்து வருவதோடு, இன்னும் சில நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த கசப்பான சில அனுபவங்களை வெளியே கொண்டு வந்தனர். அவர்களில் 'காதல்' சந்தியா, வரலட்சுமி ஆகியோர் அடங்குவர்.

இந்நிலையில் தற்போது இன்னொரு நடிகையும் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். தமிழில் 'ஆம்பள' படத்தில் நடித்தவரும் ஏராளமான தெலுங்கு படத்தில் நடித்தவருமான நடிகை மாதவி லதா, தன்னிடம் இயக்குனர் மட்டுமின்றி உதவி இயக்குனர்களும் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.


இதுகுறித்து நடிகை மாதவி லதா மேலும் கூறியதாவது:

நான் நடிகையானது என் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை. ஐதராபாத்துக்கு தனியாக புறப்பட்டு வந்தேன். தெலுங்கு படத்தில் நடிக்க தொடங்கி சில நாட்கள் கழிந்த பிறகு தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்ட பலர் என்னிடம் நல்ல முறையில் பழகினார்கள். என்னுடைய நண்பராக நீங்கள் ஏன் இருக்கக்கூடாது என்று கேட்டனர். அவர்களின் தவறான எண்ணத்தை உணராமல், நான் உங்கள் நெருங்கிய நண்பர்தான் என்றேன். அப்போதுதான் இயக்குனர் என்னிடம் தவறாக பழக முயல்வதை புரிந்துகொண்டேன். அதை எதிர்த்து பதிலுக்கு மேசேஜ் அனுப்பினேன்.

அதற்கு பதிலாக , முதல் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் எனக்கு டார்ச்சர் ஆரம்பமாகிவிட்டது. முதலில் கேரவன் ரத்து செய்யப்பட்டது. எனது ஓட்டல் அறையை மாற்றினார்கள். மரத்தின் அடியில் அமர்ந்து மேக் அப் போடும் நிலை உருவானது. அடுத்த 55 நாட்களுக்கு சோதனைகளை அனுபவித்தேன். உதவி இயக்குனர்கள்கூட என்னிடம் தவறாகவே நடந்தனர். எனது அம்மாவை படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்து வர அனுமதிக்கவில்லை. கெட்டவார்த்தையை பயன்படுத்தி பேசினார்கள்.

இவ்வளவையும் பொறுத்துக்கொண்டு ஆசிரியர் தினத்தன்று டார்ச்சர் கொடுத்த இயக்குனருக்கு ஆசிரியர் தின வாழ்த்து மெசேஜ் அனுப்பினேன். அதற்கு நான் தந்த கஷ்டங்களுக்கு பிறகும் என்னை நீ மதிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது என்று பதில் அனுப்பினார். நீங்கள் எனது குரு என்றைக்கும் உங்கள் மீது எனக்கு மரியாதை உண்டு' என நடிகை மாதவி பதில் மெசேஜ் அனுப்பினே. இவ்வாறு நடிகை மாதவி லதா கூறியுள்ளார்.

More News

எடுபிடி வேலை பார்த்தவர் எல்லாம் தயாரிப்பாளர் ஆகிவிட்டார். டி.சிவா ஆவேசம்

தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் ஏப்ரம் 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் விஷால் அணியினர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அருண்விஜய்யின் 'குற்றம் 23' படத்தின் 3 நாள் தமிழக வசூல்

'என்னை அறிந்தால்' படத்தில் விக்டர் என்ற வில்லன் அவதாரம் எடுத்த அருண்விஜய், 'குற்றம் 23' படத்தில் வெற்றிமாறன் என்ற ஹீரோ அவதாரம் எடுத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார்

இரண்டாவது வார இறுதி வசூலில் பட்டையை கிளப்பிய 'எமன்'

'பிச்சைக்காரன்' , 'சைத்தான்' என இரண்டு வெற்றிகளுக்கு பின்னர் விஜய் ஆண்டனி நடித்த 'எமன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகி அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளது...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படப்பிடிப்பு முடிய இன்னும் எத்தனை நாள் இருக்கின்றது தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகாவின் பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் திரைப்படம் '2.0'.

ஜெயலலிதா மரணம் விசாரணை குறித்து ஆனந்த்ராஜ் பரபரப்பு பேட்டி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டவுடன் அந்த கட்சியில் வெளியேறியவர் பிரபல நடிகர் ஆனந்த்ராஜ்.