நடிகை அளித்த புகாரின் அடிப்படையில்  மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது...!

  • IndiaGlitz, [Sunday,June 20 2021]


தலைமறைவாகி இருந்த அமைச்சர் மணிகண்டனை இன்று காலை காவல் துறையினர் கைது செய்தனர்.

நடிகை சாந்தினியை திருமணம் செய்துகொள்வதாக கூறி முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதனால் நடிகை கருவுற்ற நிலையில், தொடர்ந்து மூன்று முறை சட்டவிரோதமான முறையில் கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளனர். அமைச்சருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், கட்சி கூட்டங்களுக்கு செல்லும்போது சாந்தினியைத்தான் தன்னுடைய மனைவி என்றும் எல்லோரிடமும் அறிமுகம் செய்துள்ளார். இந்தநிலையில் நடிகை, அமைச்சரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதால், உன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்று மணிகண்டன் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தினி அடையார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.


இதைத்தொடர்ந்து தலைமறைவாகி இருந்த மணிகண்டனை, அடையார் மகளிர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் காவல் துறையினர் பெங்களூரில் ரகசிய இடத்தில் இவரை கைது செய்தனர். இன்று காலை கைதான மணிகண்டனிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.