விளம்பரமே இல்லாமல் ரூ.1.25 கோடி நிதியுதவி செய்த சுஷாந்த்சிங்: கவர்னர் மகனின் மலரும் நினைவுகள்

இயற்கை பேரிடர் வரும்போதெல்லாம் ஒரு லட்சம் ரெண்டு லட்சம் நிதியுதவி செய்யும் நடிகர்கள் கூட போட்டோவுக்கு போஸ் கொடுத்து தங்களை தாங்களே விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் எந்தவித விளம்பரமும் இல்லாமல் ரூ.1.25 கோடி நிதி உதவி செய்துவிட்டு அமைதியாக இருந்த சுஷாந்த் சிங் குறித்த தகவல் தற்போது வந்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நாகலாந்து மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அம்மாநில முதல்வர் பொதுமக்களுக்கு வெள்ள மீட்பு பணிக்காக தாராளமாக உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கையை அடுத்து ஏராளமானோர் தங்களால் முடிந்த நிதி உதவி செய்தனர்.

அந்த சமயம் டெல்லியில் படப்பிடிப்பில் இருந்த சுஷாந்த் சிங் நேராக நாகலாந்து மாநிலத்தில் உள்ள திமாபூர் என்ற பகுதிக்கு சென்று அம்மாநில முதல்வரை சந்தித்து 1.25 கோடி ரூபாய் நிதி உதவி செய்தார். இந்த நிதியுதவிக்கு போன் மூலம் நன்றி தெரிவித்த அப்போதைய கவர்னர் ஆச்சார்யா, முடிந்தால் நேரில் சந்திக்கலாம் என்றார்.

ஆனால் அந்த நேரத்தில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து சரியாக இல்லாததாலும், டெல்லிக்கு அவசரமாக படப்பிடிப்புக்கு செல்லவிருந்ததாலும் இன்னொரு முறை வருவதாக கூறிவிட்டு சுஷாந்த்சிங் டெல்லி திரும்பினார்.

இந்த மலரும் நினைவுகளை அப்போதைய நாகலாந்து கவர்னர் ஆச்சார்யாவின் மகன் சதுர்த் ஆச்சார்யா தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். எந்தவித விளம்பரமும் இல்லாமல் ரூ.1.254 கோடி நிதி உதவி செய்த சுஷாந்த்சிங் குறித்த தகவல் தற்போது வெளிவந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

More News

விஜய் பிறந்த நாளில் சிறப்பு அனுமதி பெற்று திரையரங்கில் ரிலீஸ் ஆகும் 'பிகில்': ரசிகர்கள் உற்சாகம்

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீரமரணம் அடைந்த 20 ராணுவ வீரர்கள் பட்டியல்: இந்திய ராணுவம் அறிவிப்பு

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக்கில் உள்ள கால்வான் என்ற பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே ஆவேசமான மோதல் ஏற்பட்டது.

வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு இதய அஞ்சலி செலுத்திய அட்லி!

இந்தியா மற்றும் சீன எல்லையான லடாக் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையிலான மோதலில் முதல் கட்டமாக 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்

சீன தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய டுவீட்: சிஎஸ்கே டாக்டர் பதவி நீக்கம்

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு இருதரப்பு ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்

தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனாவால் உயிரிழப்பு

கடந்த சில வாரங்களாகவே சென்னையில் கொரொனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருவதும் தினமும்