close
Choose your channels

சென்னை கல்லூரியில் தூக்கில் தொங்கிய பேராசிரியை: திடுக்கிடும் தகவல்

Wednesday, December 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை கல்லூரியின் பேராசிரியை ஒருவர் வகுப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி சாலையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் தனலட்சுமி. ஆனால் கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பே இவர் பணியிலிருந்து நின்று விட்டார் என்றும் இருப்பினும் அவ்வப்போது கல்லூரிக்கு வந்து சென்றதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் இன்று காலை மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் யாரும் வருவதற்கு முன்னரே கல்லூரிக்கு வந்த தனலட்சுமி தான் பாடம் எடுத்த வகுப்பறைக்கு சென்று கையை பிளேடால் கீறி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

இந்த நிலையில் வழக்கம் போல் மாணவிகள் வகுப்பறைக்குள் நுழைந்தபோது தனலட்சுமி பேராசிரியை தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் இதனை தெரிவிக்க கல்லூரி நிர்வாகிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

கல்லூரியில் வேலை பார்த்த முன்னாள் பேராசிரியை ஒருவர் தான் பாடம் எடுத்த வகுப்பறையிலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.