close
Choose your channels

திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்: எஸ்பிபி சரண்

Thursday, September 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவருக்கு அமெரிக்க மற்றும் இங்கிலாந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகமும் எஸ்பிபி அவர்களின் மகன் எஸ்பிபி சரண் அவர்களும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சற்று முன் எஸ்பிபி சரண் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் எஸ்பிபி அவர்களின் உடல்நிலை நான்காவது நாளாக சீராக உள்ளது என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் அதாவது திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார். அந்த நல்ல செய்தி கொரோனா வைரஸ் நெகட்டிவ் ரிசல்ட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்பிபி சரண் அவர்களின் இந்த புதிய வீடியோவால் எஸ்பிபி விரைவில் குணமடைந்து விடுவார் என்று அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.