பிரபல பாடகர் கொல்லப் பட்டதற்காக வெடித்த போராட்டம்!!! வன்முறையாக மாறியதால் நடந்த கொடூரம்!!!

  • IndiaGlitz, [Thursday,July 09 2020]

 

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தோப்பியாவில் ஒரு பிரபல பாடகர் மர்ம நபர்களால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இந்த விவாரகம் தற்போது அந்நாட்டில் பூதாகரமாக மாறியிருக்கிறது. உயிரிழந்த பாடகர் ஹஹலூ ஹான்டிசா கடந்த மாதம் 29 ஆம் தேதி மர்ம நபர்கள் சுட்டதால் உயிரிழந்தார். அந்த கொலையில் உள்நோக்கம் இருப்பதாகவும் திட்டமிட்டு கொல்லப்பட்டதாகவும் தற்போது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

பாடகர் ஒரோமியா என்ற பழங்குடி இனத்தைச் சார்ந்தவர். எனவே திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரோமியா மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது போராட்டங்கள் வெடித்து இருக்கிறது. இந்தப் போராட்டங்கள் 10 நாட்களாக மிகவும் தீவிரமாகி இருக்கிறது. பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாகவும் மாறியிருக்கிறது. பல இடங்களில் கடைகள் போன்ற வர்த்தக நிறுவனங்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொழுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

போராட்டங்கள் ஒருவாரத்திற்கு மேலாக நீடித்து வருவதால் நாடு முழுவதும் பதட்டம் ஏற்பட்டு இருக்கிறது. நடக்கும் போராட்டங்களை கலைக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபடுவதால் பல நேரங்களில் வாக்குவாதம் முற்றுகிறது. இதுவரை நடைபெற்ற வன்முறையில் 239 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று அம்மாகாணத்தின் காவல் துறை தகவல் தெரிவித்து உள்ளது. போராட்டங்கள் முற்றுப் பெறாத நிலையில் இன்னும் உயிரிழப்புகள் அதிகமாகும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

More News

அவருடைய பந்திற்கு சச்சினே பயப்படுவார்… சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட அஃப்ரிடி!!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விலகியதில் இருந்தே சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுல இந்த 8 மாநிலங்களும் ரொம்ப மோசம்… அதிர்ச்சி தகவல் வெளியிட்ட மத்திய அரசு!!!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் 90 விழுக்காடு பாதிப்பு வெறுமனே 8 மாநிலங்களில் இருப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

கொரோனாவில் இருந்து மீண்ட நியூசிலாந்தை பதற வைத்த நபர் இந்தியரா?

இந்தியாவிலிருந்து நியூசிலாந்து சென்ற நபர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் திடீரென தனிமைப்படுத்தப்படும் மையத்தில் இருந்து தப்பித்து சூப்பர் மார்க்கெட் உள்பட

திருமணமான 2 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண்: ரகசியமாக பெற்றோரே புதைத்த மர்மம் என்ன?

திருமணமான இரண்டே ஆண்டுகளில் புதுப்பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதும் அவருடைய பிணத்தை அவருடைய பெற்றோர்களே யாருக்கும் தெரியாமல் ரகசியமாக புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

4 வயது மகனுடன் படகு சவாரி செய்த பிரபல நடிகை திடீர் மாயம்: தற்கொலை செய்து கொண்டாரா?

பிரபல நடிகை ஒருவர் நான்கு வயது மகனுடன் படகு சவாரி செய்ய சென்றபோது திடீரென மாயமானதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது