சகோதரியை விட மிகப்பெரிய பரிசு இந்த உலகில் இல்லை. ஃபேஸ்புக் நிறுவனர் உருக்கம்

  • IndiaGlitz, [Friday,March 10 2017]

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கை உலகின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்று கூறுவதுண்டு. உலகில் இன்று ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்கள் மிகவும் குறைவு. அரசியல், சினிமா முதல் அடிப்படை விஷயங்கள் வரை எதுவேண்டுமானாலும் ஃபேஸ்புக்கில் தெரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட பெருமை கொண்ட பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் அவர்களுக்கு மிக விரைவில் இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளது. இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மிக உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்
எனது மனைவி பிரிசில்லா மீண்டும் கர்ப்பமாகியுள்ளதை தெரிந்தவுடன் அந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் இருவரும் விரும்பினோம். இந்த குழந்தையும் பெண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த உலகில் சகோதரியைவிட மிகப்பெரிய பரிசு வேறு ஒன்றும் இல்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கின்றேன். மூத்த மகளும் பிறக்க போகும் மகளும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்
என்னுடைய மூன்று சகோதரிகள் தான் எனக்கு புத்திசாலித்தனத்தையும், வலிமையையும் கற்று கொடுத்தனர். அவர்கள் எனக்கு சகோதரியாக மட்டுமின்றி மிகச்சிறந்த நண்பர்களாகவும் இருந்தனர். என்னுடைய மனைவி பிரிசில்லாவும் இரண்டு சகோதரிகளுடன் வளர்ந்து கடின உழைப்பு மற்றும் பிறர் மீது அன்பு செலுத்துதல் ஆகியவற்றை கற்றுக்கொண்டுள்ளார். நம்மை சுற்றி அம்மா, சகோதரி, தோழி ஆகியோர்கள் இருப்பதால்தான் நாம் வலிமையாக இருக்கின்றோம். அதுபோலவே எங்களுக்கு பிறக்கபோகும் செல்ல குழந்தையும் தனது சகோதரியுடன் வலிமையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்' என்று மார்க் உருக்கத்துடன் பதிவு செய்துள்ளார்.
மார்க்-பிரிசில்லா தம்பதிகளுக்கு ஏற்கனவே ஏற்கனவே 15 மாத பெண் குழந்தை இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உலக அழகி நடிகையின் தந்தை கவலைக்கிடம். நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார்

முன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையும்  பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யாராய் அவர்களின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது...

மொட்டை அடிக்கவும் தயார். அக்சரா ஹாசன் அதிரடி

கோலிவுட் திரையுலகில் தான் ஏற்று கொண்ட கேரக்டருக்காக மொட்டை அடிப்பது உள்பட எந்த வகையிலும் உருமாற தயங்காத ஒரு நடிகர் என்றால் அவர் உலக நாயகன் கமல்ஹாசன் ஒருவர்தான். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற சொல்லிற்கேற்ப கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கேரக்டருக்காக மொட்டை அடிக்கவும் தயார்

விக்ரம் அம்மாவாக கமல்-ரஜினி நாயகி?

சீயான் விக்ரம் நடிப்பில் 'வாலு' இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. விக்ரம், ஜோடியாக முதன்முதலாக இந்த படத்தில் தமன்னா இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது...

மக்கள் சூப்பர் ஸ்டாருக்காக மன்னிப்பு கேட்ட இயக்குனர்

பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் பல தடைகளை தகர்த்து நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தாலும், இந்த படத்தின் டைட்டிலில் ராகாவா லாரன்ஸ் பெயருக்கு முன்னால் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' என்ற டைட்டில் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது...

யுவன்ஷங்கர் ராஜாவின் 2வது பட அறிவிப்பு எப்போது?

இசைஞானி இளையராஜாவின் இசை வாரிசான யுவன்ஷங்கர் ராஜா, கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகி இருபது வருடங்கள் முடிந்த கொண்டாட்டம் சமீபத்தில் நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே...