close
Choose your channels

ஃபேஸ்புக் காதலனை நேரில் சந்திக்க விரும்பிய பிளஸ் 1 மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

Friday, January 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பேஸ்புக் காதலனை நேரில் சந்திக்கச் சென்ற 17 வயது பிளஸ்-1 மாணவிக்கு நேர்ந்த கொடூரம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவை செல்வபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடலூரைச் சேர்ந்த ஏழுமலை என்ற 27 வயது நபரை பேஸ்புக் மூலம் பழகியுள்ளார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் பேசியதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் தனது பேஸ்புக் காதலன் ஏழுமலையை நேரில் சந்திக்க விரும்பிய மாணவி அவரிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். இதனையடுத்து இருவரும் திருச்சியில் சந்திக்க முடிவு செய்தனர். இதனை அடுத்து கோவையில் இருந்து திருச்சி செல்ல தனக்கு தெரிந்த ஒரு கால் டாக்சி டிரைவரிடம் அந்த மாணவி உதவி கேட்டிருக்கிறார். அந்த மாணவிக்கு உதவி செய்ய விரும்பிய கால் டாக்சி டிரைவர், அவரை அடைய விரும்பி மாணவியை மிரட்டி ஊட்டிக்கு அழைத்துச்சென்று ஓட்டலில் 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்

அதன் பின்னர் மாணவியை திருச்சிக்கு அழைத்து வந்து அங்கும் ஒரு ஓட்டலில் அறை எடுத்து மூன்று நாட்கள் பாலியல் கொடுமை செய்துள்ளார். அதன் பின்னர் வேளாங்கண்ணிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் மாணவியின் செல்போன் டவரை கண்காணித்ததில் அவர் வேளாங்கண்ணியில் இருப்பதை உறுதி செய்தனர். இதனை அடுத்து கோவை போலீஸார் வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் அளிக்க, அவர்கள் மாணவியை மீட்டு ஏழுமலையை கைது செய்தனர்

பேஸ்புக் காதலனை சந்திக்க சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.