சிஎஸ்கே வீரருக்கு காயம்… ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா? கலக்கத்தில் ரசிகர்கள்!


Send us your feedback to audioarticles@vaarta.com


சென்னை சிஎஸ்கே அணியின் ஓபனரான ஃபாஃப் டூ பிளஸிக்கு இடுப்பு எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ஐபிஎல் போட்டியில் அவரால் கலந்து கொள்ள முடியுமா? என்ற சந்தேகத்தை சிலர் எழுப்பி வருகின்றனர். இதையடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி வெளியிட்டு வருகின்றனர்.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சிஎஸ்கே அணி வீரருமான டூபிளஸி தற்போது கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதில் லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்து வரும் டூபிளஸிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இன்று நடைபெற இருந்த லீக் போட்டியின் அரையிறுதியில் அவர் ஆடமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 14 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் வரும் 19 ஆம் தேதி முதல் அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது. ஏற்கனவே 29 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் வரும் 19 ஆம் தேதி முதல்போட்டியே மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சிஎஸ்கே அணிக்கும் இடையே நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை 6 ஆவதாக வெற்றி வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ள கடுமையாக முயற்சித்து வருகிறது. இதில் 3 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே தற்போது 4 ஆவது முறையாக வெற்றிபெற முனைப்புக் காட்டி வருகிறது.
இத்தனை இக்கட்டான சூழலில் சிஎஸ்கே வீரர் டூபிளஸிக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சிகிச்சை பெற்றுவருவதாகத் தகவல் வெளியாகி இருப்பதால் அவர் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வாரா? என்ற சந்தேகத்தைப் பலரும் எழுப்பி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments