close
Choose your channels

டிக்டாக்கில் ஆபாசத்தின் உச்சம்: பணம் பறித்த 'போலி' கும்பல்

Monday, March 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிக்டாக் செயலியில் ஒருசில இளம்பெண்கள் ஆபாசமான பதிவுகளை செய்வதும் அதன் பின்னர் பிரச்சனை ஏற்படும் போது போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வது அல்லது உயிரை மாய்த்துக் கொள்வதுமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன

இந்த நிலையில் டிக்டாக்கில் புகழின் உச்சியில் இருப்பவர்கள் ஒருவர் இலக்கியா. இவர் தனது ஆபாசமான சைகைகள் மற்றும் ஆபாச அசைவுகளுடன் கூடிய நடனம் ஆகியவற்றின் மூலம் பல லட்சக்கணக்கான ஃபாலோயர்களை வைத்துள்ளார். ஆபாசத்தின் உச்சத்தில் இருக்கும் இவரது வீடியோக்கள் இணையதளங்களிலும் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இலக்கியா பெயரை பயன்படுத்தி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள ஒரு கும்பல், இலக்கியா பெயரில் போலி டிக்டாக் அக்கவுண்ட் ஒன்றை ஆரம்பித்து, இலக்கியாவுடன் விடிய விடிய சேட் செய்யலாம் என்றும் கூறி பணம் பறித்து வருவதாகவும், இதனை நம்பி ஒரு சிலர் ஐயாயிரம் பத்தாயிரம் பணம் கட்டி ஏமாந்துள்ளதாகவும் தெரிகிறது

இது குறித்து தகவல் அறிந்த இலக்கியா, தான் அவ்வாறு பணம் கேட்க வில்லை என்றும் தன்னுடைய பெயரை பயன்படுத்தி ஒரு கும்பல் பணம் பறித்து வருவதாகவும் அதனை நம்பி யாரும் பணம் கட்ட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.