'Squid Game' வெப்தொடருக்கு டப்பிங் கொடுத்தவர் இந்த பிரபல தமிழ் நடிகரா? ஆச்சரிய தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,December 08 2021]

கடந்த செப்டம்பர் மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ’Squid Game' என்ற வெப்தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் இந்த தொடர் 94 நாடுகளில் 111 மில்லியன் பார்வையாளர்கள் இதுவரை பார்த்துள்ளனர் என்று நெட்பிளிக்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ’மணி ஹெய்ஸ்ட்’ தொடருக்கு இணையாக இந்த தொடரும் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த தொடர் தற்போது தமிழிலும் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் ஒரு முக்கிய கேரக்டருக்கு தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் நாசர் டப்பிங் செய்து உள்ள தகவலை நேற்று அதிகாரபூர்வமாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. இந்த தொடரில் 74 வயது நடிகர் யங் சூ என்பவரின் கேரக்டருக்கு தான் டப்பிங் பேசி உள்ளதாகவும் மிகச்சிறப்பாக இந்த டப்பிங் வந்துள்ளதாகவும் நாசர் கூறிய வீடியோவையும் நெட்பிளிக்ஸ் வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் புகழ்பெற்ற வெப்தொடர் ஒன்றில் தமிழ் நடிகர் நாசர் டப்பிங் பேசி உள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்ததுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

More News

விஜே பாவனாவுக்கு திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டதா? வைரலாகும் கணவர் புகைப்படம்!

பிரபல ஆர்ஜே பாவனா பாலகிருஷ்ணன் விஜய் டிவி மற்றும் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார் என்பது அனைவரும் அறிந்ததே

40 இயக்குனர்கள், தூங்கிட்டேன் சர்ச்சை: விளக்கமளித்த அஸ்வின்!

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் தற்போது 'என்ன சொல்ல போகிறாய்' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் '40 இயக்குனர்களின் கதை கேட்டேன்

பாடகர் உன்னிகிருஷ்ணன் மனைவி யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனின் மனைவி புகைப்படம் தற்போது இணையதளங்களில் திடீரென வைரலாகி வருகிறது. 

சாப்பாட்டில் கணக்கு பார்த்த பிரியங்கா: கடுப்பான சிபி கூறியது என்ன தெரியுமா?

எல்லாருக்கும் சாப்பாடு இருக்குமா? என்பதை பார்த்துவிட்டு சாப்பிட வேண்டும் என பிரியங்கா கூறியதற்கு சிபி கண்டித்த சம்பவம் இன்றைய புரமோ வீடியோவில் உள்ளன. 

கிச்சடியில் போதை மருந்து கலந்து, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 17 பள்ளி மாணவிகளுக்கு உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து அவர்கள் பயிலும் பள்ளிகளின்