close
Choose your channels

பிக்பாஸ் அர்ச்சனாவுக்கு கிடைத்த அன்பு பரிசு: வைரல் புகைப்படம்!

Sunday, January 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவின் அன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் அவருக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் அன்புகுரூப் என்ற பெயரை நெட்டிசன்கள் வைத்தார்கள் என்பதும் தெரிந்தது. அது மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் அர்ச்சனாவுக்கு ’அன்பு அர்ச்சனா’ என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

அர்ச்சனாவுக்கு மிகப்பெரிய பிளஸ் ஆக இருந்த அதே அன்பு தான் அவருக்கு மைனஸாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் அன்பை தொடர்ந்து மற்றவர்கள் மீது செலுத்தி வருகிறார் என்பதும் தான் அன்பு செலுத்துவதை நிறுத்தப் போவதில்லை என்றும் ’அன்பு ஜெயிக்கும் என்று தான் எப்போதும் நம்புவதாக அவ்வப்போது கூறி வருகிறார்

இந்த நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் ’அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்ற வாசகத்துடன் கூடிய ஒரு அன்பு பரிசை அளித்து உள்ளார். இந்த பரிசை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த அர்ச்சனா இதுகுறித்து கூறியதாவது: அருமையான பரிசுக்கு மிக்க நன்றி. உங்கள் அன்பு மற்றும் ஆதரவால் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்

இந்த அர்ச்சனாவின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை வழக்கம்போல் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.