8 பேர் பலி, பல ஆயிரம் கோடி சேதம்: ஃபானி புயலால் உருக்குலைந்த ஒடிஷா!

நேற்று ஒடிஷா மாநிலம் வழியே கரையை கடந்த ஃபானி புயல், அம்மாநிலத்தின் பெரும்பகுதியை உருக்குலைய செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. மேலும் இந்த புயலால் இதுவரை எட்டு பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஃபானி புயல் மீட்புப்பணிக்காக ரூ.1000 கோடியை மத்திய அரசு உடனடியாக அறிவித்துள்ளது.

நேற்றைய புயலின்போது மணிக்கு 245 கிமீ வேகம் வரை சூறாவளி காற்று வீசியதால் பல லட்சம் தென்னை மரங்கள் வேறோடு சாய்ந்தன. மேலும் பெரும்பாலான பகுதிகளில் மின்கம்பங்கள் சாலையில் சரிந்து விழுந்துள்ளதால் அம்மாநிலத்தின் பெரும்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. கல்லூரி வளாகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தலைகுப்புற கவிழ்ந்த காட்சியின் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குறிப்பாக கோவில் நகரமான பூரி நகரில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டு அவர்கள் புயல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் மீண்டும் மின்சார இணைப்பு கிடைக்க இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று மின்சார துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒடிஷாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும், பெரும்பாலான ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. புவனேஷ்வர் விமான நிலையத்தின் மேற்கூரை புயல் காற்றால் வீசியெறியப்பட்டுள்ளதால் அங்கு மீட்புப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த புயல் குறித்து பிரதமர் மோடி கூறியபோது, 'முதல்கட்டமாக மீட்புப்பணிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், நாட்டு மக்கள் ஒடிஷா மக்களுக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

More News

500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்தும் மறுகூட்டலுக்கு சென்ற மாணவி!

தேர்வு முடிவுகள் வரும்போது பாஸ் ஆகிவிட்டாலே மாணவர்கள் திருப்தி அடைந்து கொள்வார்கள். மொத்த மதிப்பெண்கள் குறித்து கவலைப்படவே மாட்டார்கள்.

3 பேர் உயிரிழப்பு, கோடிக்கணக்கில் பொருட்சேதம்; கோரத்தாண்டவம் ஆடிய ஃபானி புயல்

வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிதீவிர புயலாக உருவாகியதால் இந்த புயல் ஏற்படுத்தும் சேதம் மிக அதிகமாக இருக்கும் என ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

கட்டிப்பிடித்து முத்தமிட்டபடி பைக்கில் செல்லும் இளம்ஜோடி: வைரலாகும் வீடியோ

பைக்கில் செல்லும் ஒருசில இளைஞர்கள் படுவேகமாகவும், சாலை விதிகளை மதிக்காமலும் செல்வதால் பலவிபத்துக்களை சந்திக்க நேர்கிறது.

சாலையின் குறுக்கே விழுந்த பிஎஸ்என்எல் டவர்: ஃபானி புயலின் கொடூர காட்சிகள்

இன்று காலை ஒடிஷா மாநிலத்தில் கரை கடந்த ஃபானி புயல் கணக்கிட முடியாத அளவிற்கு சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. புயல் காரணமாக வீசிய பயங்கர சூரைக்காற்றில்

புயலின் நடுவே பிறந்த குழந்தைக்கு ஃபானி என பெயர் வைத்த பெற்றோர்!

இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை ஃபானி புயல் ஒடிஷா மாநிலத்தில் கரையை கடந்த நிலையில் புயலின்போது பிறந்த குழந்தை ஒன்றுக்கு அக்குழந்தையின் பெற்றோர் ஃபானி என்று பெயர் வைத்துள்ளனர்,