கார்த்திக் சுப்புராஜ் கேள்விக்கு பதில் தெரியாமல் முழித்த ரசிகர்கள்

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள ’பெங்குயின்’ திரைப்படம் குறித்த ஒரு கேள்வியை சமூக வலைதளத்தின் மூலம் கேட்டபோது அந்த கேள்விக்கு சரியான விடை தெரியாமல் ரசிகர்கள் முழித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படம் ’பெங்குயின்’ வரும் 19ம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் டீஸர் நாளை வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்த புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்த போஸ்டரில் அனைவரும் கீர்த்தி சுரேஷின் முகத்தை மட்டுமே கவனித்துள்ள நிலையில், கார்த்திக் சுப்புராஜ் கீர்த்தி சுரேஷின் உருவத்திற்கு கீழே குடையைப் பிடித்துக் கொண்டு இருப்பவர் யார்? என்ற கேள்வியை தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுள்ளார்.

இந்த கேள்விக்கு ஒரு சிலர் ரஜினிகாந்த் என்றும் ஒரு சிலர் தனுஷ் என்றும் பதிலளித்தாலும், உண்மையிலேயே குடையை பிடித்துள்ளவர் யார் என்பது தெரியாமல் பலர் முழித்து வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜ் கேட்ட இந்த கேள்விக்கான பதில் நாளை வெளிவர இருக்கும் டீசரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இந்திய நடிகைகள் ரொம்ப மோசம்: பிரபல நடிகை குற்றச்சாட்டு 

சமீபத்தில் அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்டு என்பவர் போலீஸ் அதிகாரி ஒருவரால் காலால் மிதித்து கொலை செய்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லண்டன் பெண்ணை மணக்கின்றாரா சிம்பு? டி.ராஜேந்தர்-உஷா தம்பதிகள் விளக்கம்

நடிகர் சிம்புவுக்கு திருமணம் விரைவில் நடக்கும் என அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான டிவிடி கணேஷ் உள்பட பலர் கூறிவந்தனர். அவருடைய பெற்றோர் சிம்புவிற்கு உறவினர்கள் மத்தியில்

விஜய் நாயகி கணவரின் கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.7.5 கோடியா?

கடந்த 2000ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த 'தமிழன்' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

பிரதமர் மோடி பெயரை சொல்லி தமிழ் நடிகரை ஏமாற்ற முயன்ற மர்ம நபர்கள்

பிரதமரின் பெயரைச் சொல்லி தமிழ் நடிகர் ஒருவரை ஏமாற்ற முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

கொரோனாவில் இருந்து மீண்டதும் கோல்ட் பீர் கேட்ட 103 வயது பெண்

கொரனோ வைரஸிலிருந்து குணமான 103 வயது பெண்மணி ஒருவர் அதனை கொண்டாட கோல்டு பீர் கேட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது