டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் ஏற்றிய கொடி: பதட்டம் அதிகரிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,January 26 2021]

மத்திய அரசு சமீபத்தில் புதிய வேளாண் மசோதாக்களை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் அரியானா உள்ளிட்ட வடமாநில விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது 

இந்த நிலையில் இன்று டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு விழா நடந்த நிலையில் டெல்லி செங்கோட்டையில் ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் குவிந்தது என்பதும் இதில் வந்த லட்சக்கணக்கான விவசாயிகள் செங்கோட்டையை சூழ்ந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்களுடைய ஜெய் கிஷான் கொடியை செங்கோட்டையில் ஏற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் இந்திய தேசியக் கொடியை பிரதமர் ஏற்றி வைக்கும் இந்த செங்கோட்டையில் இன்று விவசாயிகள் தங்களுடைய கொடியை ஏற்றி இருப்பது ஏற்றிருப்பதால் அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடக்காத வகையில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

தங்களுடைய போராட்டத்தின் அடுத்தகட்ட பகுதியாக இதை தாங்கள் கருதுவதாகவும் மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்றும் செங்கோட்டையில் கொடியேற்றிய விவசாயிகள் கூறி வருகின்றனர்

More News

'ஜன கன மன' பாடிய 72 பேர்களுக்கு இருக்கும் ஆச்சரிய ஒற்றுமை: வைரல் வீடியோ

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு ஆன 2020ஆம் ஆண்டு வரை ஜனவரி 26ஆம் தேதி பிறந்தவர்களை ஒருங்கிணைத்து இந்தியாவின் தேசிய கீதமான'ஜன கன மன'

ஆஸ்கார் விருதுக்கு செல்கிறது 'சூரரை போற்று'

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையமைத்த 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது

ரஜினி, கமல், விஜய் பட நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்!

ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த லைகா நிறுவனம் அடுத்ததாக தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுடன் இணைய இருக்கும்

காமெடி நடிகருக்கு ஜோடியாகும் சாய்பல்லவி!

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான 'பிரேமம்' என்ற மலையாள படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்த சாய் பல்லவி தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்றார் என்பது தெரிந்ததே. 

சூர்யாவின் அடுத்த படத்தில் அருண்விஜய்! பரபரப்பு தகவல்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் அருண்விஜய். இவர் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில்