close
Choose your channels

காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மகள் மீது ஆசிட் வீசிய தந்தை: பெரும் பரபரப்பு

Saturday, February 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காதல் திருமணம் செய்து கர்ப்பிணியான சொந்த மகள் மீது அவரது தந்தையே ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு என்ற பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை காவலர் பாலகுமார் என்பவரது மகள் தீபிகா. இவர் அதே பகுதியை சேர்ந்த சாய்குமார் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த காதல் தீபிகாவின் தந்தைக்கு பிடிக்காததால் அவர் வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு குடியேறினார். மேலும் தீபிகாவை கல்லூரி தவிர வேறு எங்கும் போக கூடாது என்று கண்டிஷன் போட்டு அவரை துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் சாய்குமாருக்கு போன் செய்து வரவழைத்த தீபிகா அவருடன் ஓடிப்போய் திருமணம் செய்து பெங்களூரில் அவருடைய வீட்டில் குடித்தனம் நடத்த தொடங்கினார். இந்த நிலையில் தீபிகா சமீபத்தில் கர்ப்பம் ஆனதாக தெரிகிறது. இதனை அடுத்து தீபிகாவின் வீட்டுக்கு சென்ற அவரது தந்தை பாலகுமார், தன்னுடன் வீட்டுக்கு வந்துவிடுமாறு கூறியுள்ளார். அதற்கு தீபிகா மறுக்கவே ஆத்திரமடைந்த பாலகுமார் அவருடைய முகத்தில் ஆசிட் வீசி உள்ளார். அதை தடுக்க வந்த தீபிகாவின் மாமியார் மற்றும் மூத்த மருமகள் முகத்திலும் ஆசிட்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து சாய்குமாரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலகுமாரை தேடி வருகின்றனர். ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட தீபிகா மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.