close
Choose your channels

அடுத்தடுத்து தந்தை-மகள் உயிர் பிரிந்த பரிதாபம்: கொரோனாவின் கோர முகம்

Sunday, March 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வரும் நிலையில் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் அடுத்தடுத்து கொரோனா வைரசால் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேற்கு லண்டனைச் சேர்ந்த சுதிர் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் ஜனவரி 7ஆம் தேதி முதல் பணிக்கு செல்லவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து அவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்

இதனை அடுத்து அதே லண்டனில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பார்மாசிஸ்ட் ஆக பணிபுரிந்து வந்த சுதிரின் மகள் பூஜாவுக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக தெரியவந்தது. இதனை அடுத்து அவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தந்தை இறந்த மறுநாளே அவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை-மகள் ஆகிய இருவரும் அடுத்தடுத்து கொரோனா வைரஸால் பலியாகி இருப்பது அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.