close
Choose your channels

2 மாத பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை: போக்சோ சட்டத்தில் கைது!

Thursday, May 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வருடங்களாகவே பெண் குழந்தைக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து வரும் நிலையில் அந்தியூர் அருகே பிறந்து 60 நாட்களே ஆன குழந்தை ஒன்றுக்கு அந்த குழந்தையின் தந்தையே பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல்துறையில் புகார் ஏற்பட்டுள்ளது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த துளசிமாதன் என்பவருக்கு திருமணமாகி 11 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று துளசிமாதனின் மனைவி அவரிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு வெளியே சென்று உள்ளார். அவர் திரும்பிவந்து பார்த்தபோது அந்த குழந்தையை தனது கணவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்

இதனை அடுத்து அவர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் சென்று குழந்தையை பரிசோதனை செய்தபோது, பரிசோதனையில் குழந்தை பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தையின் தாயார் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் துளசிமாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இரண்டு மாதமே ஆன குழந்தையை அந்த குழந்தையின் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.