2 மாத பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை: போக்சோ சட்டத்தில் கைது!

  • IndiaGlitz, [Thursday,May 28 2020]

கடந்த சில வருடங்களாகவே பெண் குழந்தைக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து வரும் நிலையில் அந்தியூர் அருகே பிறந்து 60 நாட்களே ஆன குழந்தை ஒன்றுக்கு அந்த குழந்தையின் தந்தையே பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல்துறையில் புகார் ஏற்பட்டுள்ளது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த துளசிமாதன் என்பவருக்கு திருமணமாகி 11 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று துளசிமாதனின் மனைவி அவரிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு வெளியே சென்று உள்ளார். அவர் திரும்பிவந்து பார்த்தபோது அந்த குழந்தையை தனது கணவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்

இதனை அடுத்து அவர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் சென்று குழந்தையை பரிசோதனை செய்தபோது, பரிசோதனையில் குழந்தை பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தையின் தாயார் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் துளசிமாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இரண்டு மாதமே ஆன குழந்தையை அந்த குழந்தையின் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

More News

சென்னை அரசு மருத்துவமனையில் தலைமை பெண் செவிலியர் கொரோனாவுக்கு பலி!

சென்னையில் கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500க்கும் மேல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணிபுரிந்து

சென்னைக்கு மட்டும் ஊரடங்கு நீட்டிப்பா? அதிர்ச்சி தகவல் 

கொரோனா வைரல் காரணமாக இந்தியாவில் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதை

ஹேக் செய்யப்பட்ட பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம்: அதிர்ச்சி தகவல்

பிரபல நடிகர் நடிகைகளின் சமூக வலைத்தள பக்கங்கள் அவ்வப்போது ஹேக் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம்

மீண்டும் ஒரு சுர்ஜித் சம்பவம்: 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் 

கடந்த ஆண்டு தமிழகத்தில் சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் இந்தியாவையே உலுக்கியது என்பது தெரிந்ததே.

'புலி'யை அடுத்து மீண்டும் சரித்திரக்கதையில் விஜய்: இயக்குனர் யார் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த ஒரே சரித்திர திரைப்படமான 'புலி' படத்தை அடுத்து மீண்டும் அவர் ஒரு சரித்திர கதையில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.