close
Choose your channels

மாமனாரிடம் அட்ஜெஸ்ட் செய்ய சொன்ன மாமியார்! அதிர்ச்சியில் மருமகள் தற்கொலை

Thursday, May 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாமனாரிடம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறும் மாமியாரே கூறியதால் அதிர்ச்சியில் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிருஷ்ணகிரி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே அக்ரஹாரம் என்ற பகுதியை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கண்ணன் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கண்ணனின் தந்தை அதாவது சந்தியாவின் மாமனார், சந்தியாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து கணவர் கண்ணனிடம் சந்தியா கூறியபோது அவர் கண்டுகொள்ளவில்லையாம். மாமியாரிடம் கூறியபோது அவர் 'இதெல்லாம் சகஜம்தான், மாமனாரிடம் அட்ஜெஸ்ட் செய்து கொள்' என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சந்தியா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு அவர் தனது பெற்றோரிடம் மாமனாரின் தவறான நடத்தை குறித்து கூறியுள்ளார். இந்த நிலையில் மிகுந்த மனவருத்தத்துடன் காணப்பட்ட சந்தியா திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos