மாமனாரிடம் அட்ஜெஸ்ட் செய்ய சொன்ன மாமியார்! அதிர்ச்சியில் மருமகள் தற்கொலை

  • IndiaGlitz, [Thursday,May 16 2019]

மாமனாரிடம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறும் மாமியாரே கூறியதால் அதிர்ச்சியில் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிருஷ்ணகிரி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே அக்ரஹாரம் என்ற பகுதியை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கண்ணன் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கண்ணனின் தந்தை அதாவது சந்தியாவின் மாமனார், சந்தியாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து கணவர் கண்ணனிடம் சந்தியா கூறியபோது அவர் கண்டுகொள்ளவில்லையாம். மாமியாரிடம் கூறியபோது அவர் 'இதெல்லாம் சகஜம்தான், மாமனாரிடம் அட்ஜெஸ்ட் செய்து கொள்' என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சந்தியா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு அவர் தனது பெற்றோரிடம் மாமனாரின் தவறான நடத்தை குறித்து கூறியுள்ளார். இந்த நிலையில் மிகுந்த மனவருத்தத்துடன் காணப்பட்ட சந்தியா திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

ரசிகர்களுக்கு வாட்சன் வெளியிட்ட வீடியோ!

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணிக்கு கோப்பையை பெற்றுத்தர வேண்டும் என்ற வெறியோடு விளையாடிய வாட்சன், முழங்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்த நிலையிலும்

இரண்டையும் கண்டிக்கின்றேன்: கமலின் இந்து தீவிரவாதம் குறித்து பிரபல நடிகை!

கமல்ஹாசன் பேசிய இந்து தீவிரவாதம் குறித்த கருத்து கடந்த இரண்டு நாட்களாக உள்ளூர் ஊடகங்களில் மட்டுமின்றி தேசிய ஊடகங்களிலும் விவாத பொருளாகியுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த முக்கிய பிரபலம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தலைவர் 160' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மும்பையில் நடந்து வந்த நிலையில்

உஸ்பெகிஸ்தானில் த்ரிஷாவின் அடுத்த பட படப்பிடிப்பு!

த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை 2', மற்றும் 'பரமபத விளையாட்டு' ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் அடுத்தடுத்த இந்த படங்கள் வெளியாகவுள்ளது

மீண்டும் புத்துயிர் பெறும் 'இந்தியன் 2': ரிலீஸ் தேதியும் முடிவு செய்யப்பட்டது!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த 'இந்தியன் 2' திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்த நிலையில் இந்த படத்தை லைகா நிறுவனம் திடீரென டிராப் செய்துவிட்டதாக கூறப்பட்டது.