close
Choose your channels

அடுத்தடுத்த சில நிமிடங்களில் விஷம் குடித்து தற்கொலை செய்த மாமனார்-மருமகள்: அதிர்ச்சி காரணம்

Sunday, December 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆரணி அருகே ஒரே வீட்டில் மாமனார் மற்றும் மருமகள் அடுத்தடுத்த சில நிமிடங்களில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணியை அடுத்த அணியாலை என்ற கிராமத்தைச் சேர்ந்த வேலு என்ற விவசாயிக்கு குமார் என்ற மகன் இருந்தார். குமாருக்கும் கல்யாணி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் ஆனது.

இந்த நிலையில் விவசாயி வேலுவுக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் அவர் மது அருந்திவிட்டு தள்ளாடியபடியே வீட்டிற்குள் வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலையிலேயே மது அருந்திவிட்டு தள்ளாடியபடியே வீட்டுக்கு வந்த வேலுவை, அவரது மருமகள் கல்யாணி, ‘ஏன் இப்படி காலங்காத்தாலே மது குடித்துவிட்டு வந்து விட்டீர்கள்’ என்று திட்டி உள்ளார்.

இதனால் அவமானம் அடைந்த வேலு, விவசாயத்துக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த வீடு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனது மாமனாரின் தற்கொலைக்கு தான் திட்டியதே காரணம் என்றும் தன்னை போலீஸ் பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் மருமகளும் அதே விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஒரே வீட்டில் அடுத்தடுத்து மாமனார், மருமகள் ஆகிய இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.