close
Choose your channels

மகன் திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன் பரிதாபமாக பலியான தந்தை!

Saturday, November 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மகனின் திருமணம் நடைபெற ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் நடந்த ஒரு எதிர்பாராத சம்பவத்தால் தந்தை மரணம் அடைந்த சோக நிகழ்ச்சி இந்தூர் அருகே உள்ள உஜ்ஜயின் என்ற கிராமத்தில் நடந்துள்ளது.

உஜ்ஜயின் என்ற கிராமத்தைச் சேர்ந்த விக்ரம்சிங் என்ற 47 வயது நபர், தன்னுடைய மகன் ரஞ்சித் சிங் என்பவரின் திருமணத்தை நடத்த ஆடம்பரமாக ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்திற்கு முந்தைய நாள் திருமண வேலைகள் அனைத்தும் நடந்து கொண்டிருந்தபோது, மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் அருகிலுள்ள கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தனர்.

அந்த கோவிலில் அப்போது திருவிழா நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திருவிழாவின் ஒரு பகுதியாக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இவ்வாறு மூன்று முறை துப்பாக்கியால் வானத்தை நோக்கி விழாக்குழுவினர் சுட்டு கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு குண்டு குறி தவறி விக்ரம் சிங் நெஞ்சில் பாய்ந்தது. இதனால் விக்ரம்சிங் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதை அடுத்து மாப்பிள்ளை உள்பட குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மறுநாள் காலையில் மகனின் திருமணம் நடைபெற இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக தந்தை இறந்த சோகம் நிகழ்ச்சி அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos