மகன் திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன் பரிதாபமாக பலியான தந்தை!

  • IndiaGlitz, [Saturday,November 16 2019]

மகனின் திருமணம் நடைபெற ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் நடந்த ஒரு எதிர்பாராத சம்பவத்தால் தந்தை மரணம் அடைந்த சோக நிகழ்ச்சி இந்தூர் அருகே உள்ள உஜ்ஜயின் என்ற கிராமத்தில் நடந்துள்ளது.

உஜ்ஜயின் என்ற கிராமத்தைச் சேர்ந்த விக்ரம்சிங் என்ற 47 வயது நபர், தன்னுடைய மகன் ரஞ்சித் சிங் என்பவரின் திருமணத்தை நடத்த ஆடம்பரமாக ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்திற்கு முந்தைய நாள் திருமண வேலைகள் அனைத்தும் நடந்து கொண்டிருந்தபோது, மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் அருகிலுள்ள கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தனர்.

அந்த கோவிலில் அப்போது திருவிழா நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திருவிழாவின் ஒரு பகுதியாக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இவ்வாறு மூன்று முறை துப்பாக்கியால் வானத்தை நோக்கி விழாக்குழுவினர் சுட்டு கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு குண்டு குறி தவறி விக்ரம் சிங் நெஞ்சில் பாய்ந்தது. இதனால் விக்ரம்சிங் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதை அடுத்து மாப்பிள்ளை உள்பட குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மறுநாள் காலையில் மகனின் திருமணம் நடைபெற இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக தந்தை இறந்த சோகம் நிகழ்ச்சி அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

More News

டெல்லி ஓட்டலில் திருமணமான இளம்பெண் படுகொலை! ஃபேஸ்புக் காதலன் காரணமா?

டெல்லி ஹோட்டல் ஒன்றில் திருமணமான இளம் பெண் மர்மமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது 

கணவரின் முதல் மனைவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய 2வது மனைவி கைது!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் அவருக்கு சுபாஷினி என்ற 39 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது

உதயநிதி குறித்த சர்ச்சை பதிவு: ஸ்ரீரெட்டியின் பரபரப்பு விளக்கம்

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் தன்னை படுக்கைக்கு அழைததாக பகிரங்கமாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி தற்போது

இரண்டு விவசாயிகளின் கடனை தீர்த்த பிகில் வெற்றி!

விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் மொத்த வசூல் ரூபாய் 300 கோடியை நெருங்கி விட்டதாக

சிலருக்கு கோவில் பிரவேசம் மறுக்கப்படவேண்டும்: கஸ்தூரி அதிரடி

கடந்த இரண்டு நாட்களாக அரசியல் தலைவர் ஒருவர் இந்து கோவில்கள் குறித்து சர்ச்சை கருத்தும், சபரிமலையில் பெண்கள் செல்லும் வழக்கின் தீர்ப்பும் டிரெண்ட் ஆகி வருவது தெரிந்ததே