close
Choose your channels

OPS மவுனம்- சசிகலாவுடன் கூட்டணிக்கு ஒத்திகையா? ரகசியத்தை உடைக்கும் பிரத்யேகப் பேட்டி!

Wednesday, February 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு கடந்த 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார் திருமதி சசிகலா. அவரது வருகை தமிழக அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தும் என்ற கருத்துக் கணிப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவிலும் சசிகலாவிற்கு ஆதரவு இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் சிலர் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுபோன்ற விஷயங்களைக் குறித்து அரசியல் விமர்சகர் Felix Ferald நமக்கு பிரத்யேக பேட்டி அளித்து உள்ளார். அந்தப் பேட்டியில் பல்வேறு கள நிலவரங்களை நமக்குச் சுட்டிக்காட்டி இருப்பதோடு வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுகவில் நடக்கும் திருப்பங்களையும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.

மேலும் சசிகலாவின் வருகை தமிழக அரசியல் களத்தில் திருப்பத்தை ஏற்படுத்தலாம் எனவும் அதிமுகவிற்குள் ஆதரவு, எதிர்ப்பு என இரண்டு நிலைப்பாடுகளும் இருந்து வருகின்றன என்றும் Felix Ferald சுட்டிக் காட்டி இருக்கிறார். இதை வைத்துக் கொண்டு சசிகலா என்ற பெரிய அரசியல் பிம்பம் கட்டமைக்கப்படுமா? அல்லது பெரிய திருப்பங்களை கொண்டு வரும் அளவிற்கு அவரிடம் மக்கள் ஆதரவு இருக்கிறதா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்து உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.