தனுஷ் பட நாயகி வீட்டில் வருமான வரி சோதனை!


Send us your feedback to audioarticles@vaarta.com


தனுஷ் நடித்த ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமான நடிகை டாப்ஸி அதன்பின்னர் அஜித்தின் ’ஆரம்பம்’ ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 2’, ஐஸ்வர்யா தனுஷின் ‘வை ராஜா வை’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் பாலிவுட் திரையுலகின் முக்கிய நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை டாப்சியின் மும்பை வீட்டில் சற்றுமுன்னர் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. டாப்சி வீட்டில் மட்டுமின்றி பிரபல பாலிவுட் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இவர் தமிழில் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.
டாப்ஸி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகிய இருவருக்கும் சொந்தமான 20 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சோதனையின் முடிவில் வருமான வரித்துறையினர் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.