ரஜினி மீது புகார் கொடுத்த சினிமா ஃபைனான்சியர் குண்டர் சட்டத்தில் கைது

  • IndiaGlitz, [Wednesday,August 02 2017]

சினிமா ஃபைனான்சியர் போத்ரா என்றால் தமிழ் திரையுலகில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்ன பட்ஜெட் படம் முதல் சூப்பர் ஸ்டார் படம் வரை ஃபைனான்ஸ் செய்தவர். இவர் அதிக வட்டி வசூலிப்பதாகவும், கொடுத்த பணத்தை மிரட்டி வசூலிப்பதாகவும் ஏற்கனவே இவர் மீது பல புகார்கள் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுவதுண்டு. மேலும் ரஜினிகாந்த், கஸ்தூரிராஜா உள்பட பல முன்னணி திரையுலகினர்களை இவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தி.நகரில் உள்ள ஓட்டல் நிர்வாகி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஃபைனான்சியர் போத்ரா மற்றும் அவரது இரு மகன்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். போத்ரா கைது செய்யப்பட்ட பின்னர் அவர் மீது நகை வியாபாரிகள் உள்பட பலர் துணிச்சலுடன் புகார் கொடுத்ததை அடுத்து தற்போது போத்ரா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷனரின் இந்த துணிச்சலான நடவடிக்கையை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
இந்த நிலையில் போத்ராவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்ததை அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

More News

கெட் லாஸ்ட்: ஆரவ்வை பார்த்து ஆத்திரமாக கூறும் ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும்போது இல்லாத டென்ஷன் இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவை பார்த்தால் வந்துவிடும்போல தெரிகிறது. அரைநிமிட வீடியோ நம்மை அதிக நேரம் யோசிக்க வைத்து சிலசமயம் குழப்பத்தையும் தருகிறது...

விஜய் டிவியின் இந்த டுவீட் தேவையா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு பங்கேற்பாளர் வெளியேறுவது தெரிந்ததே...

ஓவியாவை ஒட்டுமொத்தமாக கார்னர் செய்வது ஏன்?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டாராக ஓவியா கருதப்பட்டு வரும் நிலையில் இதுவரை பங்கேற்பாளர்கள் மட்டுமே ஓவியாவை கார்னர் செய்து வந்தனர்...

கமல்ஹாசனின் டுவீட்டுக்கு என்ன அர்த்தம்: தலையை பிய்த்து கொள்ளும் ரசிகர்கள்

கமல்ஹாசன் சாதாரணமாக டுவீட் போட்டாலே பல பேருக்கு புரியாது. அதிலும் அரசியல் குறித்து அவர் பேச ஆரம்பித்தவுடன் போடும் டுவீட்டுக்கள் பல புரிவதில்லை...

அஜித்துக்கும் விஜய்சேதுபதிக்கும் ஒரு வாரம் தான் வித்தியாசம்! எப்படி தெரியுமா?

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி ரிலீஸ் ஆவது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுவிட்டதால் அதற்கு முன்பே சுமார் 10 திரைப்படங்கள் அவசர அவசரமாக ரிலீஸ் ஆகின்றது...