வேலூர் பட்டாசு கடையில் விபத்து… 2 குழந்தைகளுடன் முதியவர் உயிரிழந்த சோகம்!

  • IndiaGlitz, [Monday,April 19 2021]

வேலூர் மாவட்டம் லத்தேரி எனும் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்தக் கடையில் இருந்த உரிமையாளர் தன்னுடைய 2 பேரக் குழந்தைகளுடன் உயிரிழந்த சோகச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. மேலும் அந்தக் கடை முழுவதும் தீக்கிரையாகியதோடு அங்கிருந்த அனைத்து இருசக்கர வாகனங்களும் எரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

லத்திதேரி பகுதியில் மோகன் என்பவர் பட்டாசு கடை நடத்தி வந்துள்ளார். இந்தக் கடைக்கு பட்டாசு வாங்க வந்த 2 வாடிக்கையாளர்கள் பட்டாசை சோதனை செய்ய விரும்பி இருக்கின்றனர். இதனால் சில பட்டாசுகளை கடை உரிமையாளர் மோகனும் அவர்களுக்கு கொடுத்து இருக்கிறார். இதை வாங்கிக்கொண்ட அந்த நபர்கள் கடைக்கு முன்னாடி வைத்தே பட்டாசை வெடிக்க வைத்துள்ளனர். இதில் இருந்து சிதறிய சில துளி நெருப்பு சில வினாடிகளில் கடைக்குள் இருந்த ஒட்டுமொத்த பட்டாசையும் வெடிக்க வைத்து இருக்கிறது.

இதனால் கடைக்குள் இருந்த உரிமையாளர் மோகன் மற்றும் அவருடைய 2 பேரக்குழந்தைகள் தனுஷ், தேஜஸ் ஆகிய மூவரும் ஒரு சில நிமிடங்களில் உடல் கருகி உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து அப்பகுதியை ஆய்வு செய்த அம்மாவட்ட ஆட்சியர் பட்டாசு கடைகளுக்கு கடுமையான விதிமுறைகளைப் பிறப்பித்துள்ளார். இந்நிலையில் பட்டாசு வாங்க சென்றவர்களால் 2 குழந்தைகள் உட்பட முதியவர் உயிரிழந்த சம்பவம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் அனுமதி!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது

'வாத்தி கம்மிங்' பாடலுடன் தீபிகா படுகோன் வெளியிட்ட வேற லெவல் வீடியோ!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'வாத்தி கம்மிங்' பாடல் பின்னணியில் பதிவு செய்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

கீர்த்தி பாண்டியனின் வீட்டிற்கு வந்த புதிதாக வந்த 'அசுரன்': வீடியோ, புகைப்படங்கள் வைரல்

சமீபத்தில் வெளியான 'அன்பிற்கினியாள்' திரைப்படத்தில் நாயகியாக நடித்த கீர்த்தி பாண்டியனின் வீட்டிற்கு புதிய உறுப்பினர் வந்துள்ளதாகவும் அவரது பெயர் 'அசுரன்' என வைக்கப்பட்டுள்ளதாகவும்

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சுஜிதாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படங்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் என்பதும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே.